Sunday 27 October 2013

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பயிற்றுனர்களுக்கு அறிவுறுத்தல்

கடலூர், அக் 26-1
முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுனர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலு வலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கள் மற்றும் ஆசிரியர் பயிற்று னர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல் நிலைப் பள்ளி யில் நடந்தது. அனை வருக் கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமை வகித்தார். கற்றல் மற்றும் கணித அடிப்படை திறன்களில் பின்தங்கியுள்ள மாணவர் களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குறுகிய காலத்திற் குள் திட்டமிட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment