Saturday 14 September 2013

10, 12ம் வகுப்புகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு

10, 12ம் வகுப்புகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு


சென்னை, செப். 13-
2012-2013ஆம் கல்வி யாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மற் றும் சிறுபான்மையினர் வகுப் பைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரொக்கப் பரிசு களை வழங்கி வாழ்த்தினார்.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிய ரின் கல்வி மேம்பாட்டிற் காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. மாநில அளவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவி களை ஊக்கப்படுத்தும் வகை யில் ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டமும் இதில் ஒன்றாகும்.இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு களில் முதல் மூன்று இடங் களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 25 ஆயிரம் ரூபாய், 20 ஆயி ரம் ரூபாய் மற்றும் 15 ஆயி ரம் ரூபாய் என்ற வீதத்தி லும், 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என்ற வீதத் திலும், பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப் பைச் சேர்ந்தவர்களில் ஒவ் வொரு பிரிவிலும் மாணவர் களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாக வும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படு கின்றன.அதன்படி, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற் றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங் களைப் பெற்ற 80 பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர், சீர்மரபி னர் மற்றும் சிறுபான்மை யினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 14 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க் கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது.

இவர் களில் 7 மாணவ, மாணவி யருக்கு ரொக்கப்பரிசுகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளியன்று (செப். 13) வழங்கி வாழ்த் தினார்.இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்ர மணியன், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை அமைச் சர் எஸ். அப்துல் ரஹீம், தலை மைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கே. அருள்மொழி, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்

No comments:

Post a Comment