Friday 25 October 2013

சோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில்




சோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில்

கோயம்பேடு, அக். 24 -
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு (2014) ஏப்ரல் மாதம் கோயம் பேட்டில் இருந்து பரங்கிமலை வரை ரயில் போக்குவ ரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக முதல் ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டது. 2 மற்றும் 3வது ரயில் விரைவில் பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.இந்த ரயிலின் சோதனை ஓட்டத்துக்காக 850 மீட்டர் நீள சோதனை ஓட்ட தண்டவாளம் கோயம்பேடு பணி மனையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக சோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.ரயிலின் ஏ.சி., என்ஜின், பிரேக், மின்தொடர்பு சாதனங் கள் அனைத்தும் நேரடி மின்சாரம் மூலம் பரிசோதிக்கப் பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும். அதை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 3 மாதங்கள் வரை கோயம்பேடு, பரங்கிமலை இடையே சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment