Saturday, 14 December 2013
Friday, 13 December 2013
AEEO பதவி உயர்வு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக ....14/12/2013
உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்
அன்பார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
பெருமக்களே ! ஒரு நற்செய்தி
இதோ வருகிறது! அதோ வருகிறது என்று சொல்லிக்
கொண்டிருந்த உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு
தகுதி வாய்ந்த உ.தொ.க.அ முதல் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதை முதல் படியாகக் கொண்டு முன்னேறுவோம் .இதை எட்டிப் பிடிப்பதற்குத்தான் எத்தனை தடைகள்!
ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல்
1.SUTHATHIRAM K - THENI
2.THAMOTHARAN R - VIRUDHANAGAR
3.NAGARAJAN R - VIRUDHANAGAR
4.JAYALATHA E - TIRUNELVELI
5.AROCKIASAMY A - RAMANATHAPURAM
6.JEYARAJU S - RAMANATHAPURAM
7.RAJAMAREES S - DINDUGAL
தயங்காமல் இதை கண்டு வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதற்காகப் பாடுபட்ட அத்துணை பேருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்
14/12/2013 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Thursday, 12 December 2013
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்வில் பிழையான கேள்விகள் இடம்பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21-ஆம் தேதி நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ்ப் பாடத்தின் "பி' வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.
பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.
பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் இதனை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் மறுதேர்வு நடத்துவதால் இப்பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும்.
மேலும் முந்தையத் தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம்.
மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். எனவே மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, "பி' வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தும். எனவே தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும்.
தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர். மேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்
Tuesday, 3 December 2013
குழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்
ஒவ்வொரு பெற்றோருமே, தங்களின் குழந்தை, நல்ல நாகரீகமான மற்றும் நயமான பண்போடு, பணிவுள்ள ஒரு மனிதனாக வளர வேண்டும் என்றே விரும்புவர். இந்தப் பண்புகளை குழந்தைகளுக்கு கற்பிப்பது அத்தியாவசியமானது என்ற போதிலும், அது கடினமான ஒன்றும் கூட.
பண்பு நலன்களை கற்பித்தல்
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்பது போன்ற பழமொழிகள் சாதாரணமானவை அல்ல. எனவே, குழந்தைகளுக்கு மேற்கூறிய பண்புகளை இளம் வயதிலேயே கற்றுத்தர தொடங்க வேண்டும். அப்போதுதான் பெற்றோரின் பணி எளிதாக இருக்கும் மற்றும் நல்ல வெற்றியும் கிடைக்கும்.
தற்போதைய உலகமய சூழலில், தங்கள் பிள்ளைகளின் பண்புநலன் மேம்பாடு குறித்து, பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பாடுகிறார்கள் என்று சில தரப்பார் கூறுகின்றனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் தாக்கத்தினால், குழந்தைகள் எதிர்மறையாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலையும் பெற்றோர்களுக்கு உள்ளது.
குழந்தைகளுக்கு சிறந்த பண்பு நலன்களை கற்றுத்தரும் கடமையானது, பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அதில், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பங்குண்டு என்பதை மறத்தலாகாது. ஆசிரியர்களை, பல குழந்தைகள் தங்களின் முன்மாதிரி ஆளுமைகளாக எடுத்துக்கொள்கின்றன.
ஒரு நான்கு வயது குழந்தை, தனது தாயை விட, தனது ஆசிரியையின் செயல்களையே அதிகம் பின்பற்றுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில சமயங்களில், வீட்டு சூழலைவிட, வெளி சூழலில் நல்ல பண்புகள் கற்பிக்கப்படுகையில், குழந்தைகள் நன்கு கற்றுக்கொள்கின்றன.
பண்பு நலன்களை எவ்வாறு கற்றுக் கொடுப்பது?
தாங்கள், தங்களின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பண்புகளை, முதலில் பெற்றோர்கள் பயிற்சிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தை பின்பற்ற ஆரம்பிக்கும். உதாரணமாக, எதையாவது கேட்கும்போது, "ப்ளீஸ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், எதையாவது பெறும்போது, "தாங்க்யூ" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர விரும்பினால், அந்தப் பண்புகளை முதலில் நீங்கள் தவறாமல் பின்பற்ற தொடங்க வேண்டும்.
நல்ல பண்புக்கூறுகள் என்பது, நடத்தைமுறை, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் ஆகிவற்றோடு தொடர்புடையது. இப்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.
ஒரு குழந்தை தனது நடத்தையில் சற்று வழுக்கினால், அதை நாம் கடுமையாக கையாளக் கூடாது. நம் குழந்தை ஒரு பொது இடத்தில் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ நடந்துகொண்டு, அதன்மூலம் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த நேரத்தில், குழந்தை எதற்காக அவ்வாறு நடந்துகொண்டது என்பதை உணர்ந்து, குழந்தையை ஆறுதல் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி நினைத்து விடுவார்களே என்று எண்ணி, குழந்தையை தண்டிக்கக்கூடாது. குழந்தை ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டால், அதை நல்ல முறையில் பாராட்ட வேண்டும்.
குழந்தையிலேயே தொடங்குதல்
உங்களின் பிள்ளை, கைக் குழந்தையாக இருக்கும்போதே, அதற்கு நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் பணியைத் தொடங்கி விடலாம். உதாரணமாக, ஒருவரின் முகத்தையோ அல்லது முடியையோ பற்றி இழுக்கும்படி குழந்தைக்கு சொல்லித் தருவதற்கு பதில், குழந்தையிடம் சாதுவாகவும், மென்மையாகவும் பேசி அல்லது குழந்தையின் முன்பாக பிறரிடம் அவ்வாறு பேசினால், அந்தப் பண்பை குழந்தையும் கற்றுக் கொள்ளும்.
கற்பது எளிது
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகளை நாம் சந்திக்கிறோம்.
காலையில் எழும்பியதிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை நாம் சந்திக்கும் மனிதர்கள், படிக்கும் புத்தகங்கள், பிறர் மூலம் பெறும் தகவல்கள், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்கள் வழியாக அறிந்து கொள்ளும் தகவல்கள் என நமக்கு சம்பந்தமான, சம்பந்தமில்லாத, தேவையான, தேவையில்லாத தகவல்கள் பலவற்றை அறிகிறோம். வரக்கூடிய நாட்களிலும் அது போன்ற நிகழ்வுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பிறர் வாழ்வில் கண்ட சம்பவங்கள் நாளை நமக்கும் நேரிடலாம்.
நமக்கு கற்றுக்கொள்ள கிடைக்கும் இந்த சந்தர்ப்பங்களை, நாம் உபயோகமாக பயன்படுத்தினால் தான் நமது அறிவை வளர்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஏடறிவு மட்டும் அல்லாமல் அனுபவ அறிவும் அவசியம் தேவை என்பதாலேயே செய்முறை வகுப்புகள் நமக்கு கற்றுத்தரப்படுகிறது. செய்முறை வகுப்புகள் மூலமாகவே ஒரு மாணவன் எளிதாக புரிந்துகொள்கிறான் என்பது கல்வியலாளர்களின் வாதம். அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு "ப்ளே ஸ்கூல்ஸ்" என்று சொல்லப்படுகின்ற விளையாட்டின் வழியாக கற்றுத்தரக்கூடிய பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றன.
பாடப்புத்தகங்களை குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்கேற்ற சூழ்நிலையை இருப்பிடத்தில் அமைத்துக்கொடுக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை சத்தமாக படிக்கும், ஒரு சிலர் அமைதியாக உட்கார்ந்து படிப்பர். சத்தமாக படிக்கும் குழந்தைகளை அமைதியாக படிக்குமாறு அறிவுறுத்தக்கூடாது. படிக்கும்போது மனப்பாடம் செய்து மட்டும் படிக்காமல் பாடத்தினை புரிந்து படிக்கவேண்டும். வார்த்தைகளை விட கருத்தே முக்கியம் என்பதை உணர வேண்டும்.
எடுத்துக்காட்டாக அறிவியல் பாடத்தை படிக்கும் பொழுது வேதிவினை எவ்வாறு நடைபெறுகிறது என்று புரிந்துகொண்டாலே போதும். வேதியல் தனிமங்களின் பெயர்களை மட்டும் நன்கு நினைவில் கொண்டு புரிந்து கொள்ளலாம். சமூக அறிவியல் பாடங்களை படிக்கும் பொழுது வரலாற்று சம்பவங்களை தெளிவுபட கேட்டறிந்தாலே போதும். ஆண்டுகளை மட்டும் சரியாக நினைவில் நிறுத்தி எளிதாக படிக்கலாம்.
கணிதப் பாடங்களை கூட எளிதாக சம்பவங்களை கொண்டு புரிய வைக்கும் ஆசிரியர்கள் நம்மிடையே உண்டு. பாடங்களை நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய சம்பவங்களை தொடர்புபடுத்தி கற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அதுபோன்று ஆசிரியர்களும் புத்தகங்களை கடந்து கற்றுக்கொடுக்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களை பாடப் புத்தகங்களில் உள்ளவாறு மட்டும் கற்காமல், நமக்கு ஏற்ற வகையில் நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியுமோ அதற்கு தகுந்தவாறு நினைவில் நிறுத்தினாலே போதும். கற்பது எளிதாக மாறும்.
ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : குஜராத் பள்ளிகளில் அறிமுகம்
ஆமதாபாத்: மாணவர்களிடையே, நற்பண்புகளை உருவாக்கவும், சிறந்த குடிமக்களாக மாற்றவும், குஜராத் மாநில பள்ளிகளில், என்.சி.சி., போன்ற புதிய திட்டம், துவக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய திட்டம் குறித்து, அம்மாநில, டி.ஜி.பி., பிரமோத் குமார் கூறியதாவது:மாணவர்களை, நாளைய சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்துடன், சுரக் ஷா செடு என்ற, புதிய திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, போலீசார் அணியும் சீருடை தரப்படும்.
இங்கு, பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய திட்டம் குறித்து, அம்மாநில, டி.ஜி.பி., பிரமோத் குமார் கூறியதாவது:மாணவர்களை, நாளைய சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்துடன், சுரக் ஷா செடு என்ற, புதிய திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, போலீசார் அணியும் சீருடை தரப்படும்.
போலீசாரே பயிற்சி :
போலீசார், என்னென்ன பணிகளை செய்து வருகின்றனர் என, இவர்களுக்கு கற்றுத் தருவதோடு, அதற்கான பயிற்சியும் தரப்படும். இந்த பயிற்சியை, போலீசாரே அளிப்பர்.போலீசாரின் பணிகள் மட்டுமல்லாமல், சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக திகழ்வதற்கான, ஒழுக்க நெறி பற்றியும், அவர்களுக்கு கற்றுத் தரப்படும்.
குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு மரியாதை தருவது, உயிர்களிடத்தின் அன்பு காட்டுவது, மற்றவர்களுக்கு உதவுவது ஆகிய விஷயங்களை பற்றி, கற்றுத் தரப்படும்.கட்டாயமில்லை ஏற்கனவே, பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், என்.சி.சி., திட்டத்துக்கும், இதற்கும், வித்தியாசம் உண்டு. என்.சி.சி., பயிற்சி, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் சேருவதற்கு உதவுவது. ஆனால், நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம், இதிலிருந்து, முற்றிலும் மாறுபட்டது. இந்த திட்டத்தில் சேரும்படி, மாணவர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். தாங்களாக முன்வந்து சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, இதில் இடமளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி: 8 பேர் சஸ்பெண்ட்
போலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்த 8 பேரை சென்னை மாநகராட்சி கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
Monday, 2 December 2013
Sunday, 1 December 2013
Friday, 29 November 2013
நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் சனிக்கிழமை (நவம்பர் 30) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் வளிமண்டத்தின் மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
பீகார்: ஆசிரியர் தகுதித்தேர்வில் 10 ஆயிரம் பேர் தோல்வி
பீகார் மாநில அரசு பள்ளிகளில், தொடர்ந்து ஆசிரியர்களாக பணியாற்ற நடத்தப்படும் தகுதித்தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும், இந்நிலையில் 5ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தகுதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு மற்றும் ஹிந்தி பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 43.447 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
இதில் 24 சதவீதம் பேர் அதாவது 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் 32.833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்,
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும், அதில் தோற்றால் ஆசிரியராக பணியாற்ற முடியாது என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
Monday, 25 November 2013
EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 30KB அளவுக்கு மாற்றம் செய்ய எளிய வழி
EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 30KB அளவுக்கு மாற்றம் செய்ய எளிய வழி






EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம்
EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம்
செய்ய அதிகம் நேரம் செலவாகிறது. போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச்
செய்ய ஒரு வசதி இருக்கிறது. முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு
போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும். EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட
வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும். போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில்
உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். பின்பு
Windows மெனுவில் Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழே ஐந்தாவதாக வரும்create new action
என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய New action க்கு RESIZE எனப் பெயர் கொடுக்கவும்.
பின்பு Record பட்டனை அழுத்தவும். பின்பு Image மெனுவில் Image size என்பதை
தேர்ந்தெடுக்கவும். Constrain Proportions என்பதில் உள்ள டிக்கை எடுத்து விடவும்.
Width,Height,Resolution ஆகியவற்றை 200க்கு செட் செய்து கொள்ளவும். பின்பு Save As கொடுத்து
EMIS RESIZE என்ற டெஸ்க்டாப் போல்டரில் அதை சேமிக்கவும்.பின்பு Stop playing /recording
என்பதை கிளிக் செய்து உங்களுடைய action நிறுத்தவும். அவ்வளவுதான் 99 சதவீதவேலையை
நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்! இனிமேல் File மெனுவில் Automate இல் Batch
பட்டனை கிளிக் செய்து Action இல் RESIZE என்பதை செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான
EMIS போல்டரை செலக்ட் செய்து ஓ.கே கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் அனைத்து
படங்களும் EMIS RESIZE என்ற போல்டரில் தேவையான படிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்!
நன்றி: நண்பர் திரு அசதா அவர்களின் வழிகாட்டுதலுக்கு!
EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி? - விளக்கப் படங்களின் மீது CLICK செய்து பெரிதாக பார்க்கலாம்
EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி? - விளக்கப் படங்களின் மீது CLICK செய்து பெரிதாக பார்க்கலாம்
EMIS - Offline Photo Resize Tutorial
Step 1:
Step 2:
Step 3:
Step 4:
Step 5:
Step 6:
Step 7:
Step 8:
Step By Step Instruction Now Available.
Step 1:
எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.
Step 2:
புகைப்படம் Windows Picture Manager இல் தோன்றும். Menu Bar இல் உள்ள Picture ஐ Click செய்து அதில் உள்ள Compress Menu ஐ Click செய்ய வேண்டும்.
Step 3:
வலது புறத்தில் தோன்றும் Pane இல் உள்ள Compress For - இல் E - Mail Messages ஐ Select செய்த பிறகு OK வை Click செய்யவும்.
Step 4:
பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.
Step 5:
மீண்டும் Menu Bar இல் உள்ள Picture -> Resize ஐ Select செய்யவும்.
Step 6:
வலது புறத்தில் தோன்ற கூடிய Pane இல் Customs Width X Height என்ற கட்டத்தில் 275 X 350 மதிப்புகளை பதிவு செய்து OK கொடுக்கவும்.
Step 7:
பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.
Step 8:
இப்போது நீங்கள் Resize செய்ய வேண்டிய புகைப்படம் தயார்.
மேலும் இது குறித்த தகவல்களுக்கு திரு. ரமேஷ், கணினி ஆசிரியர், பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம். அவர்களை தொடர்பு கொள்ளவும். Cell No :9445961887
Tuesday, 19 November 2013
இந்தியாவை வாசித்துப்பாருங்கள்
இந்தியாவின் அறிவியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட முன்னோடிகள் அனைவருக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவர்கள் எல்லாருமே ‘இந்தியாவைக் கண்டடைந்தவர்கள்’. தாங்களே இந்தியப் பெருநிலத்தில் அலைந்து திரிந்து தங்களுக்கென ஓர் இந்திய தரிசனத்தை அடைந்தவர்கள்.
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?
- கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
- அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
கதை சொல்லிகள் இருக்கிறார்களா
கதை சொல்லிகள் இருக்கிறார்களா
எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள் தனது பேச்சின் ஊடே கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,
ஆங்கிலத்தில் கதைகள் சொல்லும் கதை சொல்லிகள் பலர் கோடை முகாம்களை நடத்துவதை அறிவேன், ஆனால் தமிழில் கதை சொல்வதை முழுநேர வேலையாகக் கொண்ட ஒருவரை இதுவரை நான் கண்டதேயில்லை என்று சொன்னேன்
சீரமைக்க வேண்டும்!
அனைவருக்கும் கல்வி தரமாய் சமமாய் தர வேண்டுமென்று நம் அரசியல் சாசனம் சொல்கிறது. உலகிற்கே வழிகாட்டிய நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்த இந்தியா இன்று உலகத் தரவரிசைப் பட்டியலில் நூறில் கூட இடம் பிடிக்காதது வேதனை கலந்த கசப்பான உண்மை. வரலாற்றுச் சறுக்கலும் கூட.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எஸ்.அருளப்பன் உள்பட 129 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நாங்கள் பணிபுரிகிறோம். உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 1988-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. இதன்படி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், அனைத்து பலன்களையும் எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணை நடந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி இடைநிலை ஆசிரியர்கள் கோரும் ஊதியம் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் பள்ளி கல்வி இயக்ககத்தின் உயர்கல்வி விதிகளின் கீழ் வருகின்றனர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் வருகின்றனர்.
மனுதாரர்களை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் விதிகளுடன் ஒப்பிட முடியாது. உயர்நீதிமன்ற அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் வேறுபட்டவை. அவை மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)








