Wednesday 25 December 2013

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்

 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "-வித்யாதிட்டம் மாநிலத்தில்முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளதுபுதுச்சேரியில் உள்ளபிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல் தெரிவிக்கும்
திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் "ஆப்சென்ட்ஆனாலோதாமதமாகவந்தாலோபெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல்பறக்கும்.மேலும்ரேங்க் கார்டு வழங்குவதுபெற்றோர் சந்திப்பு கூட்டம்விடுமுறைபோன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சிலபள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள்தினசரி தேர்வில்எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம்எஸ்., மூலம் பெற்றோர்களுக்குதெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம்மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்"அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால்இத்திட்டம்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம்தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளதுஇதையடுத்து, "-வித்யாஎன்றபெயரில் இந்த திட்டம்முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படஉள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசுஆங்கில உயர்நிலைப்பள்ளிகிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசுஉயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "-வித்யாசெயல்பாட்டுக்குவருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "-வித்யாதிட்டப் பணிகளில்ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இருபள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல்போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறதுஇரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில்இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்துமாநிலம்முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "-வித்யாதிட்டத்தை அமல்படுத்த புதுச்சேரிஅரசு திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment