Saturday 7 September 2013

துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு

பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் துறைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் சுமார் 58-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
பதவி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் போன்றவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் துறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு நடந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 58-க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
துறைத் தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment