Thursday 23 May 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2

ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம் 
>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-
>விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
>பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம்,
>டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படவேண்டும்
>ஓ,எம்,ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும்.
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் ,விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
>ஆன்லைன்,தபால்,பேக்ஸ்,கூரியர் போன்ற வழிகளிலும்,ஜெராக்ஸ் நகலில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் (டி ஆர் பி மையம் அல்லது வேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால்) நிராகரிக்கப்படும்.

No comments:

Post a Comment