சிதம்பரம்: சிதம்பரம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஆவணங்கள் இன்றி இயக்கப்படுகிறது. பள்ளி சவாரி ஓட்டும் ஆட்டோக்களில் மாணவர்கள் அதிக அளவில் அழைத்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நகரில் விதிகள் மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.
டி.எஸ்.பி., எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, ஆட்டோ டிரைவர்கள் தங்கள் இஷ்டம் போல் ஆட்டோக்களை இயக்கி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை ஆட்டோக்களில் அதிக அளவு மாணவர்களை அழைத்து சென்ற ஆட்டோக்களையும், ஆவணங்கள் இல்லாத 15 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தனர்.  BY DINAMALAR
 
 
No comments:
Post a Comment