Friday 24 May 2013

ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?

''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)  நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed)  எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.

தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.''

Thursday 23 May 2013

Draft Syllabus For 2014-15 (XI-Std) and 2015-16 (XII-Std)

This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancy download                             
Advance Tamil download
Bio-Botany  download
Bio-chemistry download
Bio-Zoology download
Business Mathematics XI , XII
Chemistry  download
Commerce XI-1 , XI-2 , XII-1 , XII-2
Communicative English download
Computer Sciene  download
Economics download
English download
Ethics & Indian Culture download
Geography download
History download
Home Science  download
Mathematics  download
Microbiology  download
Nursing  download
Nutrition & Dietetics  download
Physics download
Political Science download
Statistics  download
Tamil  XI , XII

9ம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுக்கான, அனைத்து பாட ஆசிரியர் கையேடு வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2

ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம் 
>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-
>விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
>பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம்,
>டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படவேண்டும்
>ஓ,எம்,ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும்.
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் ,விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
>ஆன்லைன்,தபால்,பேக்ஸ்,கூரியர் போன்ற வழிகளிலும்,ஜெராக்ஸ் நகலில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் (டி ஆர் பி மையம் அல்லது வேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால்) நிராகரிக்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு

தகுதிகள்

PAPER-2
=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.
=>தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.
=> தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
=>D.T.Ed., தகுதிபெற்றோர் தாள்-1,, B.Ed., தகுதிபெற்றோர் தாள்-2,க்குண்டான தேர்வுகள் எழுதலாம்,
=>இரண்டு தாள்களும் எழுத தகுதி பெற்றோர் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுத வேண்டும்.

Wednesday 22 May 2013

TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013


# ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

# ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.

# ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

# அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

# ஏறத்தாழ 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில் 10397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

# இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.

# காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

# எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

# இந்த நிலையில், தகுதித்தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

# அதன்படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17– ந்தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.

# காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

# தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150– க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

# ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

# விண்ணப்பம் எப்போது? தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.

# விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும்.

# பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ. ஆபீஸ்) அலுவலகத்தில் ஜூலை மாதம் 1–ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

# இந்த ஆண்டு ஏறத்தாழ 7 லட்சம் பேர் தகுதித்தேர்வு எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனவே, சுமார் 14 லட்சம் விண்ணப்ப படிவங்களை அச்சிட முடிவு செய்துள்ளது.

# கடந்த ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், ஒருசில மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், இந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

# 15 ஆயிரம் காலி இடங்கள் கடந்த ஆண்டுக்கான காலி பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் என மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

# இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் 13 ஆயிரம், இடைநிலை ஆசிரியர் இடங்கள் 2 ஆயிரம். பணிநியமன முறையில் இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.

# முதலில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

# பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமட்டில், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்– 2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார்செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு செய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு, மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பிளஸ் 2 உடனடி தேர்வு அட்டவணை அறிவிப்பு, விண்ணப்பம் மே23 முதல் 27 வரையும், தேர்வு ஜூன் 19ல் துவங்கி ஜூலை 1ல் முடிகிறது.


நலத்திட்டங்கள் கிடைக்கவில்லையா? கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றுகள் பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் அது குறித்து உடனடியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம்.

அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எவரையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு சம்பந்தமில்லாமல் வெளி நபர்கள் எவரேனும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி பணிகளில் ஈடுபட்டாலோ, இடையூறுகள் செய்தாலோ கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவர்களின் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.

மேலும், விவரம் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 வரை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 2526 8323 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு. (TET எழுத உள்ள ஆசிரியர்களின் வசதிகாக அரசால் வழங்கப்பட்ட 9 அரசாணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது)

GO.(MS) NO.72 HIGHER EDN (K2) DEPT DATED.30.04.2013 - Public Services – Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – Click Here...

TO DOWNLOAD GO.58 HIGHER EDUCATION (K2) DEPT, DATED.15.04.2013 - Higher Education - Public Services Equivalence of Educational qualification - M,.Sc applied Mathematics and Computer Science awarded by Bharathidasan University as equivalent to M,.Sc Mathematics and B.Sc. Environmental Zoology awarded by Bharathidasan University as equivalent to B.Sc.Zoology -Recommendation of Equivalence Committee OrdersCLICK HERE...

GO.30 HIGHER EDUCATION (K2) DEPT DATED.4.3.2013 - Public Services – Equivalence of Degree – M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management), and B.Com. (Computer Application) awarded by Bharathidasan University, Tiruchirappalli as equivalent to M.Com. and B.Com. degrees respectively – Recommendation of Equivalence Committee –Orders – issued...

GO (MS) NO.25 HIGHER EDUCATION (K2) DEPT DATED.22.02.2013 - 5 year Integrated Programmes Offered by Annamalai University - Considered as Equivalent to the Corresponding Under Graduate - Order Click here...

TO DOWNLOAD GO.(1D) NO.333 HIGHER EDUCATION (H2) DEPARTMENT DATED.27.11.2012 CLICK HERE...

அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29 & 30, இரண்டாவது சுற்று 31 & 1.6.13 அன்றும் நடக்க உள்ளது

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

Ï¥gæ‰ÁtF¥òfŸghlthçahf Ñœ¡f©l gŸëfëš eilbgwΟsJ
       Kjš R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 29.05.2013 k‰W« 30.05.2013
       Ïu©lh« R‰W gæ‰Á el¡F« eh£fŸ : 31.05.2013 k‰W« 01.06.2013
t. v©
ghl«
gæ‰Áju¥gL« gŸëfŸ
neu«
1
jäœ
Á§fhu« ßisM©fŸnkšãiy¥ gŸë, No.1, M.T.H rhiy, br‹id-49
fhiy 9.30 kâ Kjš
2
M§»y«
gÂ¥gf¢ br«kš f. fzgÂmuÁd® nkšãiy¥ gŸë, nfhl«gh¡f«, br‹id-24
fhiy 9.30 kâ Kjš
3
fâj«
C.S.I.nkhdf‹ nk. ã.gŸë, Ïuha¥ng£il, br‹id-14
fhiy 9.30 kâ Kjš
4
m¿éaš
K.C.S.nk. ã. gŸë, t©zhu¥ng£il,
P.A.Ïuh#u¤Âd« rhiy, br‹id-21
fhiy 9.30 kâ Kjš
5
r_fm¿éaš
muÁd® bg©fŸnk. ã. gŸë, mnrh¡ef®, br‹id 83
fhiy 9.30 kâ Kjš
6
cl‰fšé k‰W« Xéa«
br‹id bg©fŸ nkšãii¥gŸë, irjh¥ng£il nk‰F br‹id-15
fhiy 9.30 kâ Kjš
9« tF¥Ãš Ïu©L ghl§fŸ ngh¡F« MÁça®fŸ (cjhuzkhf fâj« k‰W« M§»y« f‰Ã¡F« MÁça®fŸ) Kjš R‰¿š fâj¤Â‰F 2 eh£fS« 2-« R‰¿š M§»y¤Â‰F  01.06.2013 m‹W k£L« fyªJ bfhŸs nt©L«. M§»y« k£Lnk vL¡f Toa MÁça® Kjš R‰¿š M§»y ghl¤Â‰F  2 eh£fS«  fyªJ bfhŸs nt©L«. ntW kht£l¤ij rh®ªj 9-« tF¥ò ngh¡F« MÁça®fŸ br‹idæš ÏUªjhš mt®fS« Ï¥gæ‰Áæš fyªJ bfhŸsyh« vd bjçé¡fyh»wJ. gæ‰Á eilbgW« gŸëfŸ étu¤Âid Kj‹ik¡ fšé mYtyf¤ÂY« nf£L bjçªJ bfhŸsyh«.

Monday 20 May 2013

இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளநிலை கல்வியியல் படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.1000ம், தபால் மூலம் அனுப்ப ரூ.1050ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in/userfiles/Prospectus%20BED%202014%20English.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒரு நாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் நான்  கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

Sunday 19 May 2013

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

 
           இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாவட்ட வாரியாக அமைந்துள்ள கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள், படிப்புகள் குறித்து அனைத்துத் தகவல்களும் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

             மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பொறியியல் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

                கல்லூரிகளின் விவரங்களைக் காண http://www.annauniv.edu/vac2013/collsel.html  என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழை இணைக்கத் தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழக தாற்காலிக துணைவேந்தர் பி.காளிராஜ் கூறினார்.பி.இ. கலந்தாய்வின்போது மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற அசல் சான்றிதழ்களைக் கொண்டுவந்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பி.இ. விண்ணப்பத்தில் கோரியுள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் கேட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் குவிந்துள்ளதாகத் தெரிகிறது. விண்ணப்பங்களைப் பெற்றவுடன் மாணவர்கள் அதில் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனமாகப் படிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் 8 முதல் 12 வரை படித்துள்ள மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. இந்தத் தகவல் விண்ணப்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழும் அனைவருக்கும் தேவையில்லை.
அந்தந்தப் பிரிவுக்குரிய மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை மட்டும் விண்ணப்பதோடு இணைத்தால் போதுமானது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழோ, மாற்றுச்சான்றிதழோ இல்லையென்றாலும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். கலந்தாய்வின்போது அவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துவந்தால் போதுமானது. சில அரிய சந்தர்ப்பங்களில் சான்றிதழ் கிடைக்கப்பெறாத மாணவர்களும் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
கலந்தாய்வுக்கு முன்னதாக அவர்களின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள், "செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு'வுக்கு அனுப்பலாம்.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள்: பி.இ. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 20-ம் தேதி கடைசி நாளாகும். ஆனால், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 20-க்குள் வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழின் நகலை மட்டும் மே 30-க்குள் நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பித்தால் போதுமானது. பிற தகவல்கள் அடங்கிய விண்ணப்பங்களை அவர்கள் மே 20-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
ஜூன் 17-ல் விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு: பி.இ. கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 500 இடங்களுக்கு ஜூன் 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும். ஜூன் 17 முதல் 19 வரை கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கும்.
பொறியியலுக்குத் தேவையான கணிதம்: வரும் கல்வியாண்டில் பி.இ. படிப்பில் கணிதம், தொழில் திறன் மேம்பாடு ஆகியை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பொறியியல் படிப்புகளுக்குத் தேவையான கணிதம் மட்டும் பி.இ., பி.டெக். முதலாமாண்டு மாணவர்களுக்கு மீண்டும் கற்றுத்தரப்படும். அவர்களுக்கான முதல் அகமதிப்பீட்டுத் தேர்வும் இந்த கணிதத்தில் இருந்துதான் இருக்கும்.
இதன் மூலம் மாணவர்கள் கணிதம், கணிதம் தொடர்பான படிப்புகளில் ஆர்வத்துடன் படிக்கலாம். பி.இ. மாணவர்களுக்கான தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். மாநிலம் தழுவிய அளவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு மண்டல அளவிலும் வளாகத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்படும், என்றார் காளிராஜ்.தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் உடனிருந்தார்.

இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 3ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்" பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2" பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்" பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.

"ஆப்ஜக்டிவ்" முறையில், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

த.மே.க.பணி - சுழற்சி பட்டியல் - 01.01.2013 அன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவிக்கு (ஊட்டு பதவிகளிலிருந்து) தகுதி வாய்ந்த அரசு உயர் நிலைப் பள்ளி த.ஆ, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உ.இ நிலை-1 சுழற்சி பட்டியல் வெளியீடு.

த.தொ.க.சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் கலந்தாய்வு 24.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத் தில் நடைபெறுகிறது.

த.தொ.க.சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து AEEO / AAEEO பணி மாறுதல் கலந்தாய்வு 25.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது. வரிசை எண். 1 முதல் 250 வரை உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

த.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.