Friday 30 August 2013

sept.05 , வலைபூ நண்பர்கள் கூட்டம் மற்றும் புகைப்படம் பேசுது ஒளிபரப்பு

எனக்கு துணையாக
யாராவது வருவார்கள்
என்ற ஏக்கத்துடனேயே
இதுவரை தனிமையுடன்
வலைபூவில் இணைந்திருந்தேன்

நண்பர்களே உங்களுடன்
உரையாடிய பின்புதான்
வலை பூவில் நம் நட்பின் வரைவிலக்கணம்
அறிந்து கொண்டேன்

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
ஆனால் நம் வலைபூ இணைப்பு நம்மை விட்டு
என்றும் பிரியாது
ஆகவே நாம் அனைவரும் இணைவோம்
வாருங்கள் விழாவிற்கு வரவேற்கிறேன் உங்கள் அனைவரையும்

இனிய வணக்கம்

                             கல்விசார் முகநூல் மற்றும் வலைபூ நண்பர்களே மீண்டும் வணக்கம் . நம் ஆசிரியர்களுக்கு நாம் நடத்தும் குடும்ப விழா .

                           05.09.2013 அன்று மாலை Dr.இராதாகிருஷ்ணன்  விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.   அன்று காலை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் .

                           நம் வலைபூ நண்பர்கள் "புகைப்படம் பேசுது" என்ற தலைப்பில்   அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடியாக  04.09.2013 பிற்பகல் முதல் ஒளிபரப்பலாம் .

                         நண்பர்களே தாங்கள் வரும்பொழுது CAMEARA , TABLET, LAPTOP , DATACARD , USB CONNECTION ...இவையெல்லாம் எடுத்து வந்தால் நம் வலைபூக்களில் நம் குடும்ப விழாவை நேரடியாக ஒளிபரப்பலாம்.

                        முதன்முதலாக இணைய கல்விசார் நண்பர்கள் 05.09.2013 அன்று கூடுகிறோம் . வாருங்கள் சென்னைக்கு , காலையில் வந்தவுடன் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்  என் அலைபேசியை தொடர்பு கொள்ளவும் .


                         சென்னை எழும்பூர் அருகில் சேத்துப்பட்டு M.C.C.Hr.Sec.School இல்
சந்திபோம்.

phone : 9750982287 , 9789422608
E-mail: aeeoganesan@gmail.com

                                                                                                            இவண்,
                                                                                                 இரா.கணேசன்,
                                                                                                  AEEO எழும்பூர்.


                                                                       

பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை: பள்ளி கல்வித்துறை

சென்னை: "தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது" என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், முதல் வாரத்தில் துவங்கி, கடைசி வாரத்தில் முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல், முதல் வாரத்தில் முடியும். இதன்படி தான், பல ஆண்டுகளாக, தேர்வுகள் நடந்து வருகின்றன. இரு தேர்வுகளுமே, தனித்தனியாகத் தான் நடக்கின்றன. அப்படியிருக்கும் போதே, பல குளறுபடிகள் நடந்து வருகின்றன.
கடந்த பொதுத்தேர்வில் கூட, 10ம் வகுப்பு தேர்வில், பல குளறுபடிகள் நடந்தன. இது போன்ற நிலையில், "பிளஸ் 2 தேர்வுகளுக்கு இடையே வரும் விடுமுறை நாட்களில், 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாம்&' என, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சிலர், தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜனிடம் தெரிவித்துள்ளனர். இதனால், "வரும் பொதுத்தேர்வு, ஒன்றாக நடத்தப்படலாம்" என தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை, இயக்குனரிடம் கூறியுள்ளனர்; அவ்வளவு தான். தற்போதைய தேர்வு நடைமுறையில், எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அது போன்ற எண்ணமும், துறைக்கு இல்லை. மாணவர்கள், தேவையில்லாமல் குழப்பம் அடைய வேண்டாம். பொதுவாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.
தேவராஜன் கூறுகையில், "10ம் வகுப்பு தேர்வை, ஒரு மாதம் முன்கூட்டியே நடத்துவது குறித்து, தேர்வுத்துறை, எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் தான், இந்த ஆண்டும் தேர்வு நடக்கும்" என்றார்.
இரண்டு தேர்வுகளையும், ஒன்றாக நடத்தினால், பெரும் குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு தேர்வு மையத்தில், பிளஸ் 2 கேள்வித்தாள்களும், 10ம் வகுப்பு கேள்வித்தாள்களும் இருந்தால், தேர்வின் போது, கேள்வித்தாள்களை, மாற்றி வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், நடைமுறை ரீதியாக, பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத்தேர்வு விடைத்தாள்களை கையாள்வதில் புதிய திட்டம்: இயக்குனர்கள் குழு தீவிர ஆலோசனை

பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த பொதுத்தேர்வை பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சம் மாணவர்களும் எழுதினர். தனித்தேர்வு மாணவர்களையும் சேர்த்தால், 20 லட்சத்தை தாண்டுகிறது. இத்தனை லட்சம் மாணவர்களுக்கும், தேர்வை நடத்தி, குளறுபடி இல்லாமல், தேர்வு முடிவை வெளியிடுவதற்குள், தேர்வுத்துறை, திக்கி, திணறி விடுகிறது. அதிலும், தேர்வுகளின்போது நடக்கும் பல்வேறு குளறுபடிகள், தேர்வுத்துறைக்கு, பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.


தொடரும் குளறுபடிகள்:


கடந்த பொதுத்தேர்வில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகிய இரு தேர்வுகளிலுமே, வரிசையாக தொடர் குளறுபடிகள் நடந்தன. பிளஸ் 2, தமிழ் முதற்தாள் கேள்வித்தாளில், 63 மதிப்பெண்களுக்கு உரிய கேள்விகள், 2012ல் கேட்கப்பட்ட கேள்விகளாகவே இருந்தன. கேள்வி எண்கள் கூட மாறாத அளவிற்கு, அப்படியே, கேள்விகள், "ரிப்பீட்' ஆனது, பெற்றோரையும், மாணவர்களையும், அதிர்ச்சி அடைய வைத்தது. பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டுகள், விருத்தாசலம் சந்திப்பில் இருந்து, ரயிலில் ஏற்றியபோது, 157 விடைத்தாள்கள், தண்டவாளத்தில் விழுந்து, சின்னாபின்னமானது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசு பள்ளியில், ஆங்கிலம் முதல்தாள் தேர்வை எழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகளை, தபால் ஊழியர், பஸ்சில் எடுத்துச் சென்றபோது மாயமானது.


அன்றே சொன்னது "தினமலர்':


இதுபோன்ற சம்பவங்களால், தேர்வுத்துறை, கடும் நெருக்கடிக்கு ஆளானது. இதனால், விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்று நடவடிக்கையை எடுப்பது குறித்து, தேர்வுதுறை ஆலோசித்து வருகிறது என, கடந்த ஏப்ரல், 3ம் தேதி, "தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. இந்நிலையில், தேர்வுத்துறையில் உள்ள பிரச்னைகளை களையவும், தேர்வை, எவ்வித பிரச்னைகளுக்கும் இடமின்றி நடத்தவும், பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், தேர்வுத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இவர், ஏற்கனவே, பல ஆண்டுகள், தேர்வுத் துறையில், இணை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பதால், அரசு, இவரை, தேர்வுத் துறைக்கு மாற்றியது. அரசு எதிர்பார்த்தது போல், தேர்வுத்துறை இயக்குனர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதிப்பெண் பட்டியலில், மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தவறாக இடம்பெறும் சம்பவம், பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், ஏராளமான மாணவர்கள், தேர்வுக்குப்பின், தேர்வுத்துறைக்கு படையெடுக்கின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முழுமையான விவரங்கள் அடங்கிய படிவத்தை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கி, அவர்களிடம் கையெழுத்து பெற, இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த படிவத்தில், மாணவர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெற்றோர் என, நான்கு தரப்பினரும் கையெழுத்து போட வேண்டும் எனவும், இயக்குனர் கண்டிப்பாக கூறி உள்ளார்.


இயக்குனர் குழு அமைப்பு:


இந்தப் பணிகள், பள்ளிகளில், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த நடவடிக்கையாக, பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், தபால் துறை மற்றும் ரயில்வே துறையை ஈடுபடுத்தாமல், புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, தேர்வுத்துறை, ஆலோசித்து வருகிறது. இதற்காக, பள்ளிக்கல்வி இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய குழு, அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஏற்கனவே ஓரிரு முறை கூடி, ஆலோசனை நடத்தி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், பார்சல் லாரிகளை பயன்படுத்தி, விடைத்தாள் கட்டுகளை, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தபோதும், ஏனோ, கைவிடப்பட்டது.


பொதுத்தேர்வுக்கு முன் முடிவு:


தற்போது, மீண்டும், பார்சல் லாரிகள் மூலம், விடைத்தாள் கட்டுகளை கையாளும் திட்டத்தை அமல்படுத்தலாமா அல்லது அரசுத்துறை வாகனங்களை பயன்படுத்தலாமா என்பது குறித்து, இயக்குனர்கள் குழு, தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இத்திட்டத்தில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து, விரிவாக ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்க, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. வரும் பொதுத்தேர்வுக்கு முன், இந்த விவகாரத்தில், முடிவு எடுக்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

தமிழகத்தில் கல்வியின் வரலாறு

ஆங்கியலம் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதும், ஆரம்ப பாடசாலையில் பயிற்று மொழியாக தமிழ் ஏற்கப்பட்டதும் - தொழிற்கல்வி, ஓவியக்கல்வி, மருத்துவக்கல்வி முதலானவை தொடங்கியது, மாணவர்களின் உடை, நாகரீகம் அறிமுகமானதும் இக்காலக்கட்டத்தில் தான்.
தமிழகத்தில் கல்வியானது, திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. அரிச்சுவடி, வாய்ப்பாடு, கணிதம் இவ்வளவுதான் பாடம். அடுத்து குருகுலம். இது பெரும்பாலும் வேத பாடசாலை. இங்கு வேதம், வானசாஸ்திரம். கனிதம் போதிக்கப்பட்டன. பெரும்பாலும் தனிப்பட்டவரின் விருப்பம் மற்றும் வசதியானவர்களின் விருப்பமாக கல்வி கற்பது இருந்தது.
மொகலாயர்களின் ஆட்சியில் மசூதிகளையொட்டிய பகுதிகளில் அரபி பாடசாலை இருந்தது. ஹிந்துக்களுக்கு சமஸ்கிருதப் பாடசாலைகளும் குருகுலம் போன்று உருவானது. அரபி, சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் அமைப்புகளுக்கு ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டன. மொகலாய ஆட்சிக்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேய பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் நாட்டினரும் இதே மானியத்தை தங்களின் பகுதியில் நீட்டித்தனர். பின்னர் மானியம் நிறுத்தப்பட்டு மீண்டும் கல்வி என்பது வசதியுள்ளவர்களின் விருப்பமாயிற்று.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிகோலியவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த 80 வியாபாரிகள் தான். இந்த பியாபாரிகள் இந்தியாவில் வணிகம் செய்ய விரும்பினர். இதற்கான அனுமதியைக் கோரி இங்கிலாந்து மகாராணி எலிசபெத்திடம் மனுவும் செய்தனர். உடனடியாக இதற்கு அனுமதிக்காவிட்டாலும், வியாபாரிகள் ஒரு பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்போரில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தரப்பில் யோசனை கூறினர். அதன்படி 80 வியாபாரிகளும் சேர்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மீண்டும் விண்ணப்பித்தனர். 1599ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இதற்கான அனுமதியை இங்கிலாந்து மகாராணி வழங்கினார்.
இந்தியாவில் மொகலாயர் ஆட்சி. மன்னர் ஜஹாங்கீர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பிரிட்டிஷாருக்கு முன்பாகவே வியாபாரம் செய்யும் எண்ணத்தில் டச்சுக்காரர்களும், போர்ச்சுகீசியர்களும், பிரெஞ்சுக்காரர்களும் மொகலாய ஆட்சியை அணுகி, அனுமதி பெற முடியாமல் தோற்றுப் போயிருந்த நேரம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியும் தன் பங்குக்கு முயன்றது. இறுதியில், 1612ல் சூரத்தில் மட்டும் வியாபாரம் செய்து கொள்வதற்கான அனுமதியை ஆங்கிலேய கம்பெனி பெற்றது. இதன் தொடர்ச்சியான முயற்சிகளில் 1647ல் இந்தியாவின் பல பாகங்களிலும் 23 இடங்களில் வர்த்தக நிறுவனங்களை கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது.

SCHOOL REGISTER

jiyik Mrphpah;fshy; gs;spapy; Ngzg;gl Ntz;ba
mYtyfg; gjpNtLfs; kw;Wk; Nfhg;Gfs;
1        Mrphpah;fs; tUifg; gjpNtL
2        khzth;fs; tUifg; gjpNtL
3        jw;nray; tpLg;Gg; gjpNtL
4        ,af;fg;gjpNtL ( Movement  Register)
5        tpLg;Gfs; gjpNtL
6        epWtdg; gjpNtL ( gs;spf;F chpikAila epyk;> tiuglk;> fl;blq;fs;  tpguk;> mq;fPfhuk;)
7        msitg; gjpNtL (Scale Register)
8        rk;gsg; gl;Lthlhg; gjpNtL
9        khzth; Nrh;f;if tpz;zg;gg; gjpNtL/Nfhg;G
10       khzth; Nrh;f;if/ ePf;fy; gjpNtL
11       gjpTj;jhs; gjpNtL
12       Njf;fg; gl;bay; gjpNtL
13       kjpg;ngz; gjpNtL
14       khzth; tUifr; RUf;fk; (jpdrhp/khjhe;jpuk;)
15       jsthlr; rhkhd;fs; ,Ug;Gg; gjpNtL (Tools and Plant Register)
16       cjtpj; njhif toq;fy; gjpNtL
17       gs;spf;F muR toq;Fk; gbtq;fs;  gjpNtLfs; ,Ug;Gg; gjpNtL
18       E}y; epiyag; Gj;jf ,Ug;Gg; gjpNtL/toq;fy; gjpNtL
19       khjhe;jpu fzf;F
20       mwptpay; Ma;tf ,Ug;Gg; gjpNtL/toq;fy; gjpNtL
21       tpisahl;Lg; nghUs; ,Ug;Gg; gjpNtL/toq;fy; gjpNtL
22       Gutyh; jpl;lk;> nuhf;fg; gjpNtL                   
23       gpw gzpg; gjpNtL (On other duty Register)
                     
24       midj;J tpiyapy;yhg; nghUl;fs; gjpNtLfs; (ghlE}y;> ghlf; Fwpg;NgL> rPUil> NgUe;J gaz ml;il . . . )
25       jzpf;ifg; gjpNtL
26       khzth;fs; kUj;Jtg; ghpNrhjid gjpNtL
27       ghh;itahsh; gjpNtL
28       tpohg; gjpNtL
29       fzpzp  gad;ghl;Lg; gjpNtL

   midtUf;Fk; fy;tp ,af;fk; rhh;e;j gjpNtLfs;

1        gs;sp Nkyhz;ikf; FO gjpNtL
2        gs;sp kw;Wk; guhkhpg;G khd;a gjpNtL
3        tq;fpf; fzf;F gjpNtL
4        midtUf;Fk; fy;tp ,af;f nfhLf;fg;gl;l nghUs; ,Ug;Gg; gjpNtL (Computers, Laptops, Projectors, Xerox Machine, Printers)

5        fl;blg; gzpfs; Fwpj;j gjpNtL
    fhiy topghl;L Kiw
    (jpq;fs; fpoik)
t.vz;
nray;ghLfs;
epkplq;fs;

01
jkpo;j;jha; tho;j;J
01.30
02
nfhb Vw;Wjy;/
nfhb tzf;fk;
02.00
03
nfhbg;  ghly;
02.00
04
cWjp nkhop
04.00
05
jpUf;Fws; kw;Wk; tpsf;fk;
02.00
06
nra;jp thrpj;jy; (jkpo; kw;Wk; Mq;fpyk;)
04.00
07
,d;iwa rpe;jid/nghJ mwpT/gonkhop
02.00
08
gpwe;j ehs; tho;j;J
00.30
09
Mrphpah; ciu
02.08
10
ehl;Lg;gz;
00.52


nkhj;jk;
20.00



Wednesday 28 August 2013

தேர்வு நிலை ஊதியம் குறித்த வினா. ஐயம் தீர்க்கவும்.
Inbox
x

Negamiyas Rayan <negamiyas@gmail.com>
Aug 25 (3 days ago)
to me
மதிப்பிற்குரிய ஐயா,
      தங்களது புதிய வலைதளம் மிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று வினா விடைப் பகுதியும் மிக மிக புறட்சி மிக்கது. நன்றி.
      1. தனியார் பள்ளியில் பணிபுரிந்து, அரசு பள்ளிக்கு பணிக்கு வரும்போது பணிவிடுவிப்பு செய்ய வேண்டுமா அல்லது பணிவிலகல் செய்ய வேண்டுமா?
      2. அரசுப் பள்ளியில் சேரும்போது நிர்ணயம் செய்யப்படும் துவக்க ஊதியம் என்ன?
      3. தனியார் பள்ளியில் பெற்றை இறுதி ஊதியத்தை துவக்க ஊதியமாக பெற முடியுமா? அரசாணை உள்ளதா? 
      4. தனியார் பள்ளியின் பணிக்காலத்தை எடுத்துக் கொண்டு தேர்வு நிலை பெறும் போது தேர்வு நிலை ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய அரசாணை உள்ளது என அறிவோம். 
        தற்போது தேர்வு நிலை ஊதிய விகிதம் இல்லை என்பதால் (தனியார் பள்ளி--அரசுப் பள்ளி வந்தவர்களுக்கு) தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரை பெறப்பட்டுள்ளதா? 
   தற்போது இடை நிலை ஆசிரியர் துவக்க ஊதியத்தில் 3% என்பது சாத்தியமா? அது தேர்வு நிலை ஆகுமா? எந்த உ.தொ.க.அலுவலராவது அர்சிடம் தெளிவுரை கேட்டுள்ளார்களா? 
    ஏன் தனியார் பள்ளியில் பெற்ற கடைசி ஊதியத்திலாவது 3% வழங்கக் கூடாது. 
    அரசு பள்ளியில் 2 வருடம் (தகுதி காண் பருவகால) மட்டும் ஊதிய இழப்பாக இருக்கட்டுமே.  இது குறித்து எனது ஐயம் தீர்க்க மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன். 
     
   தாங்கள் அமைத்துள்ள பதில் அளிக்கும் குழு மிகவும் அனுபவமும், தற்போதைய நிலையில் இது போன்ற ஆசிரியரின் ஊர்திய இழப்பை நன்கு அறிந்தவர்களும் ஆவர்.  
இது குறித்து தெளிவுரை பெற முயற்சி மேற்கொள்ளப் படுமா?

    சிறுபான்மை பள்ளியில் பணிக்காலம்  -- 9 ஆண்டுகள்
               பெற்ற இறுதி ஊதியம்      -----   ரூ. 14050 + 2800
அரசு பள்ளியில் தேர்வு நிலைக்குப் பிறகு ஊதியம்  --  ரூ. 7060 + 2800 மொத்த பணிக்காலம் --- 12 1/2 ஆண்டுகள்
    இதன் பதிலை வலைதளத்திலோ அல்லது Reply mail மூலமாகவோ அளிக்கவும்.   
   நன்றி... நன்றி...  
By Rayan.
Ganesan AEEO <aeeoganesan@gmail.com>
Aug 26 (2 days ago)
to aeeoarockiam

ANSWER :

1.பணி விலகல் செய்ய வேண்டும்
2.சாதாரண நிலை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்
3.முடியாது
4.கேள்வியை தெளிவாக அனுப்பவும்

நன்றி

கேள்விக்கு பதில் கூறியவர் திரு.மோகன் P.A to DEO (ஓய்வு)

நீங்களும் கேள்விகளை கேட்கலாமே ............!!!!

E-mail : aeeoganesan@gmail.com 

ஆசிரியர் தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு

First Published : 27 August 2013 06:33 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இன்று வெளியிடப்பட்டுள்ளன.இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் மனு செய்யலாம்.
இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போது ஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுநேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது முக்கிய விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விடைகள் தொடர்பான ஆட்சேபங்கள் பெறப்பட்டவுடன் ஒவ்வொரு பாடவாரியாக அவை பரிசீலிக்கப்படும்.இதைப் பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுக்கள்  அமைக்கப்படும். அந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேபங்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து, இறுதிசெய்ய்பட்ட விடைகளுடன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டுக்குப் பிறகு இறுதி விடைகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்                                                  
  • Answer Key
  • Social science study
  • Social Science
  • Group 4
  • Study Materials
  • Answer
  • Spirits
  • Job interview questions
  • Teacher Recruitment
  • Free online tests
  • Answer Key
  • Social science study
  • Social Science

TET - 2013 Key Answer Published by TRB


Tamilnadu Teacher Recruitment Board (TRB) - Now Published Proper TNTET Key Answer
for TNTET - 2013 - Paper 1 & Paper 2 Exams. Today Trb Published the Tentative Key Answer for TNTET Key Answers.