Friday 28 June 2013

தலைமையாசிரியர் பதவி உயர்வு:ஐகோர்ட் தடை



விருதுநகர்:உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, பள்ளிக்கல்வித்துறையால், மொழி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட 181 வது விதியை தளர்த்த கோரிய மனுவில், பதவி உயர்வுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 181 விதியின் படி கட்டுப்பாடு விதித்தது. இதில் 2001 ஜன.,31 க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட முதல் நிலை தமிழாசிரியர்கள், பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே, 2012 டிச.,31வரை உள்ளவர்கள், தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையான பி.லிட். பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பி.எட்., பட்டம் பெறாமல், மொழியாசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதன் பின்னர், பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். இருந்தும் பதவி உயர்வில் இவர்கள் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில், தமிழக தமிழாசிரியர்கள் கழகம் சார்பில், மாநில துணை செயலாளர் இளங்கோவன், 181 விதியை தளர்த்தில அனைத்து மொழி ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு,இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
midtU¡F« fšé Ïa¡f«
“midtU« f‰ngh«”                                                                “midtU« ca®nth«”
mD¥òe®

khãy¤ £l Ïa¡Fe®,
midtU¡F« fšé Ïa¡ff«,
br‹id 600 006.
bgWe®

TLjš Kj‹ik¡ fšé mYty®fŸ,
midtU¡F« fšé Ïa¡f«
mid¤J kht£l§fŸ

e. f. v©. 1946/mfÏ/m7/12  ehŸ: 14.06.2013
bghUŸ-          midtU¡F« fšé Ïa¡f« - ca®¤bjhl¡f tF¥ò 6, 7 k‰W« 8                          gil¥gh‰wš fšé Kiw tF¥giwæš eilKiw¥gL¤Jjš - rh®ò
***********
                midtU¡F« fšé Ïa¡f¤Â‹ _y« eLãiy, ca®¤bjhl¡f¥gŸëfëš 6,7 k‰W« 8 tF¥òfëš mid¤J¥ ghl§fisÍ« gil¥gh‰wš fšé Kiwæš f‰Ã¤jš eilbgw nt©Lbkd V‰fdnt R‰w¿¡ifÍ«, mj‰Fça murhiz v© 260 nj 12.10.07mid¤J kht£l§fS¡F« mD¥g¥g£LŸsJ.
            j‰bghGJ gŸëfëš 6,7k‰W« 8 tF¥òfëš gil¥gh‰wš fšé f‰Ã¡F« Kiwæš Rz¡f« V‰g£LŸsjhš mjid¡ fisÍ« bghU£L gŸë¡ fšé¢ brays® mt®fŸ flªj V¥uš khj¤Âš br‹idæš cŸs jäœeh£L ghlüš fHf khehL Tl¤Âš mid¤J fšé¤ Jiw  mYty®fS¡F« ÛshŒÎ¡ T£l« el¤Âd®. Ï¡T£l¤Âš mid¤J eLãiy k‰W« ca®¤bjhl¡f¥ gŸëfëY« 6,7k‰W« 8 M« tF¥ò khzt®fS¡F¥ gil¥gh‰wš fšé Kiwæš jh‹ tF¥giwæš f‰Ã¤jš eilbgw nt©Lbkd m¿ÎW¤ÂÍŸsh®. mjdhš x›bthU x‹¿a§fëš gâò绋w MÁça¥gæ‰We®fŸ j§fS¡F xJ¡f¥g£l gŸëfS¡F¢ br‹W tF¥giwæš MÁça®fŸ gil¥gh‰wš fšé Kiwæš jh‹ ghl« f‰Ã¡»‹wd® v‹gjid cW brŒjš nt©L«. nkY« gil¥gh‰wš fšé eilKiwæš Ïšyhj gŸëfis¡ f©l¿ªJ m¥gŸëfëY« Ï¡f‰wš Kiwia eilKiw¥gL¤j nt©Lbkd m¿ÎW¤j nt©L«.
            TLjš Kj‹ik¡ fšé mYty®, kht£l bjhl¡f¡ fšé mYty®fŸ, ca®ãiy k‰W« nkåiy¥ gŸëfëYŸs 6,7 k‰W« 8 tF¥òfëš gæš»‹w khzt®fS¡F gil¥gh‰wš fšé Kiwæš jh‹ f‰Ã¤jš eilbgw nt©Lbkd m¿ÎW¤j nt©L«.  nkY« bjhl¡f¥ gŸëfis MŒÎ¢ brŒÍ« cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ gŸëfis gh®itæl¢ bršY« bghGJ gil¥gh‰wš fšé Kiwæš jh‹ f‰Ã¤jš eilbgW»wjh v‹gjid cW brŒjš nt©L«.  Ï¡fšé Kiwæš f‰Ã¤jš eilbgwhj gŸëfis x‹¿a§fŸ thçahf¤ bjhF¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®¡F m¿¡if mD¥òjš nt©L«. nkY« khãy¤ £l  Ïa¡f¤Â‰F« Ϫj m¿¡ifia¢ rk®¥Ã¡f nt©Lbkd mid¤J kht£l TLjš Kj‹ik¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

khãy¤ £l Ïa¡Fe®
efš - 1
1.        bjhl¡f¡ fšé Ïa¡ff«.
2.       kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, mid¤J kht£l§fŸ.
3.       cjé¤ bjhl¡f¡ fšé mYty®, mid¤J kht£l§fŸ.

4.       jiyikahÁça®fŸ mid¤J kht£l§fŸ.
jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ,  br‹id 600 006.

e.f.v©. 014608/nf2/2013 ,     ehŸ 28.06.2013
bghUŸ
bjhl¡f¡ fšé mid¤J tif bjhl¡f/eLãiy¥gŸëfëš 2013-2014 M« fšéah©oš jäœtê k‰W« M§»y têæš 1-M« tF¥Ãš nr®ªJŸs khzt®fë‹ v©â¡if étu« nfhUjš - rh®ªJ

gh®it
bjh.f.Ï. brašKiwfŸ e.f.v©. 14608/nf2/2013               ehŸ. 14.6.13
. . .
            bjhl¡f¡ fšé Ïa¡ff¤Â‹ f£L¥gh£oYŸs mid¤J tif bjhl¡f k‰W« eLãiy¥gŸëfëš 2013-2014 M« fšéah©oš jäœtê k‰W« M§»y têæš 1-M« tF¥Ãš nr®ªJŸs khzt®fë‹ v©â¡if étu¤Âid 28.6.2013 ehëš cŸsgo ϤJl‹ Ïiz¡f¥g£LŸs 2 got§fëš (Excel format š mD¥g nt©L«) x‹¿a thçahf jah® brŒJ 1.7.2013 m‹W Égfš 2.00 kâ¡FŸ Ïa¡Feç‹
Ï-bkæš Kftç¡F jtwhkš mD¥Ã it¡FkhW mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
              ÏJ äfΫ mtru«
Ïiz¥ò  : got« - 2  
                                               
                                                                         sd/- (é.Á.Ïuhnk°tu KUf‹)
bjhl¡f¡ fšé Ïa¡Fe®
bgWe®

mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ.

மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை

"மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார்.


அவரது அறிக்கை: மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். கூடுதலாக, ஒரு பிரிவு துவங்க வேண்டும் எனில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அனுமதி பெற வேண்டும்.

ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்பட, விதியில் இடம் இல்லை. எனினும், நடப்பு கல்வி ஆண்டில், சில பள்ளிகளில், எல்.கே.ஜி.,- ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், அதிகமான மாணவரை சேர்ப்பதாக தெரிய வருகிறது. மெட்ரிகுலேஷன் விதி தொகுப்பில் உள்ள விதிகளை ஏற்காமல், அதிக மாணவர்களைக் கொண்டு, ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகள் மீது, துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மாநிலம் முழுவதும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், "ஏ&' யில் ஆரம்பித்து, "ஜி&' வரை, ஏழு பிரிவுகள் நடக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும், 3,000த்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளில், இது தான் நிலை.இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் முதல் வகுப்புகளில், அதிகமான பிரிவுகள் இயங்கி வருகின்றன.

தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது

உயர் தொடக்க வகுப்புகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டிற்கான வளரறி (FA(a), FA(b) குறித்த செயல்பாடுகள் (அனைத்து பாடங்களுக்கும்)

மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு


ஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்லுநர்

பெங்களூரில் ஜூலை 14-ம் தேதி, பள்ளி மாணர்களுக்கான ஞாயிறு அறிவியல் பள்ளியைத் தொடங்க இருப்பதாக, இஸ்ரோவிலின் முன்னாள் சூரியஒளி மின்சக்தி பிரிவு வல்லுநர் சுஜாதா விர்தே தெரிவித்துள்ளார்.
 பெங்களூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில், அறிவியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மிகக் குறைவு. இதைப் போக்கும் வகையில், சிறுவர்களிடம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறி்த்த ஆர்வத்தையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 14-ம் தேதி, ஞாயிறு அறிவியல் பள்ளியை பெங்களூரில் தொடங்க இருக்கிறேன். இதில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இப்பள்ளி, ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமைகளில், 2 மணி நேரம் மட்டுமே இயங்கும். இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, சூரிய சக்தி மின் சக்தியாக மாறும் விதம், மோட்டார் வாகனங்கள் இயங்கும் விதம், மின்னணு தொழில்நுட்பத்தில் சென்சார்கள் மூலம், கருவிகளை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்குதல், மாதிரி கருவிகள் செய்தல், புதிய படைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 9035865668 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.NEWS DINAMANI

தில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி!

தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள நான்காண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பல்வேறு கல்லூரிகள் அறிவித்துள்ள கட் ஆஃப் மதிப்பெண் 100 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
இதனால், விரும்பிய பாடங்களை எளிதில் மாணவர்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட் ஆஃப் மதிப்பெண்களை தில்லி பல்கலைக்கழக ஆளுகைக்கு உள்பட்ட பல கல்லூரிகள் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளன.
ஹிந்து கல்லூரியில் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்புக்கான "கட் ஆஃப்' 96.75-99.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. வணிகவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான "கட் ஆஃப்' மதிப்பெண்கள் 97-99.75 சதவீதமாக இருந்தது.
பாஷ்கராச்சார்யா கல்லூரியிலும் "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் வணிகவியல் கல்விக்கு புகழ் பெற்ற ஸ்ரீராம் கல்லூரியில் இடம் பிடிப்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் வணிகவியலுக்கு முதல் "கட் ஆஃப்' 97 சதவீதமாகவும், பொருளியல் படிப்புக்கு 97.5 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், வணிகவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடுமையான போட்டிகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் வணிகவியல் பட்டப் படிப்புக்கான "கட் ஆஃப்' 90 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. 
ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் 96.75-98.75 சதவீதம், லேடி ஸ்ரீராம் கல்லூரியில் 97.75-98.75 சதவீதம், ஷாகீத் பகத் சிங் கல்லூரியில் 96-99 சதவீதம், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் 96.75 சதவீதம் என "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம் படிப்புக்கும் இதே நிலை உள்ளது. ஹிந்து கல்லூரி 97.5 சதவீதம், எல்.எஸ்.ஆர். கல்லூரி 97.75 சதவீதம், ஹன்ஸ்ராஜ் 97.25, மிராண்டா ஹவுஸ் 96.5-97, கிரோரிமால் 95.5-98.5, ராம்ஜாஸ் 94.5-97.5 என "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹிந்து கல்லூரியில் ஆங்கிலம் படிக்க 98.5 சதவீதம் "கட் ஆஃப்' இருக்க வேண்டும்.  இதழியல் கல்வி வழங்கும் தில்லியின் ஆறு கல்லூரிகளிலும் "கட் ஆஃப்' 90 சதவீதத்துக்கு அதிகமாக
உள்ளது.அதிக கட் ஆஃப் மதிப்பெண்களுடன் முதல் பட்டியல் வெளியிடப்பட்டதால், கிடைத்த பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல மாணவர்கள் தெரிவித்தனர்.
"மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்க விரும்பினேன். கட் ஆஃப் மிக அதிகமாக இருப்பதால் அதே கல்லூரியில் தத்துவவியல் பட்டப்படிப்பு சேர எண்ணியிருக்கிறேன்' என்று மீரட்டில் இருந்து 95 சதவீத மதிப்பெண்களுடன் தில்லியில் படிக்க வந்துள்ள தன்யா மானிக்.
"தில்லி வெங்கடேஸ்வரா கல்லூரியில் படிக்க கேரளத்தில் இருந்து விண்ணப்பித்தேன்.  வரலாற்றுப் பாடத்துக்கும் அதிக கட் ஆஃப் இருக்கிறது' என்று சொல்கிறார் தர்ஷன் ஸ்வாமி.
85 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ள தனது மகனுக்கு வணிகவியல் பாடம் படிக்க வாய்ப்புக் கிடைக்காது என்று அவரது தந்தை பிரமோத் பாரதி கவலை தெரி
வித்தார்.
"தில்லியில் 60, 70 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்களுக்கு இடமே கிடைக்காது போலிருக்கிறது.
நன்றாகப் படித்த மற்றும் பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்பது போல கட் ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன' என்றார் அவர்.


Thursday 27 June 2013

விஞ்ஞானிக்கும்

பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.
அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.
அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.

தமிழ் பல்கலையில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், எம்.எட் படிப்புக்கு ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, பீல்டு சர்வேயர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏற்ற கல்வித்தகுதி, இதர தேவைகள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
ஜூலை 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஜூலை 17 க்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது.
விண்ணபிப்பவர் www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.
தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 500 சுயநிதி கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில், உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், கல்லூரிகளில், மாலை வகுப்புகளை அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது சுழற்சி முறையில், காலை, மாலை என இரு வகுப்புகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

காலை வகுப்புகள், காலை, 8:00 மணி முதல், பகல், 1:00 மணி வரையிலும், மாலை வகுப்புகள், பகல்,1:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையிலும் நடக்கிறது. கல்லூரிகளில், ஒரு ஆண்டுக்கு, இரு பருவங்கள் என, ஒரு இளங்கலை பட்டப் படிப்புக்கு, ஆறு பருவங்கள் உள்ளன.

ஒரு பருவத்திற்கு, 90 வேலை நாட்கள். நாள் ஒன்றுக்கு, 5 மணி நேரம் என, மொத்தம் ஒரு பருவத்திற்கு, 450 மணி நேரம், மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தினமும் ஐந்து மணி நேர வகுப்பில், மாணவர்களுக்கு, ஐந்து பாடங்கள் கற்று தரப்படுகின்றன. ஒரு பாடத்தை, 50 நிமிடங்கள் வரை ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.

ஒரு நாளுக்கு, ஐந்து மணி நேரமே கல்லூரி இயங்குவதால், ஒரு பருவத்துக்கான பாடங்களை, உரிய காலத்தில் நடத்தி முடிக்க இயலாத நிலை இருப்பதாக, புகார் எழுந்தது. இதனால், கல்லூரிகளின், வேலை நேரம் அதிகரித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டது.

உயர்கல்வி மன்ற உத்தரவுப்படி, இளங்கலை பட்ட படிப்பில், முதல் நான்கு பருவங்களுக்கு, 150 மணி நேரம் முதல், 180 மணி நேரம் வரையிலும், அடுத்த இரண்டு பருவங்களுக்கு, 360 மணி நேரம் முதல் 450 மணி நேரம் வரையிலும், அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிக்கு அனுப்பியுள்ளது.

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூலை முதல் வாரத்தில், "ஆன்-லைன்" வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

www.tnscert.org என்ற இணைய தளத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இது, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.

பள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டி தொடர்ந்த வழக்குகள் சார்பாக அரசானை வெளியிடப்பட்டமைக்கு கூடுதல் விவரங்கள் கோருதல்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.NEWS BY DINAMANI

பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்த மாணவர்கள்

பிளஸ் 1 பாடப் புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர் புதன்கிழமை குவிந்தனர். தங்களுக்கான புத்தகங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெற்றுச் சென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. புத்தகங்கள் வேண்டும் என முன்கூட்டியே தெரிவித்திருந்த தனியார் பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல தனியார் பள்ளிகள் மாணவர்களே நேரடியாகப் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.
இதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் 1 புத்தகங்களைக் கேட்டு டி.பி.ஐ. வளாகத்துக்கு வந்தனர். எனவே, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் சார்பில் புத்தக விற்பனை டி.பி.ஐ. வளாகத்தில் புதன்கிழமை (ஜூன் 26) தொடங்கப்பட்டது.
புத்தகங்களை வாங்க வரிசையில் நின்றிருந்த தனியார் பள்ளி மாணவர் ஒருவர் கூறும்போது, பள்ளிக்கு புத்தகங்கள் கிடைக்க 15 நாள்கள் ஆகும் எனவும், டி.பி.ஐ. வளாகத்தில் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் புதன்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை வாங்கினர்.
இது தொடர்பாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது: பிளஸ் 1 மாணவர்களுக்காக ஒரு கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. தனியார் பள்ளிகளிடம் தேவையான புத்தகங்களின் அளவு தொடர்பாக கணக்குக் கோரப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தங்களுக்குப் புத்தகங்கள் வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டன.
இப்போது, மாணவர்களையே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுமாறு இந்தப் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால், மாணவர்கள் வீணாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக மாணவர்களின் பள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தனியார் பள்ளிகள் மொத்தமாக புத்தகங்களை எங்களிடம் இருந்து வாங்கி விநியோகித்திருந்தால் மாணவர்களின் அலைச்சல் தடுக்கப்பட்டிருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகநிறுவனத்திடம் புத்தகங்கள் வேண்டாம் என எழுதிக் கொடுத்த பள்ளி நிர்வாகங்கள், தங்களது மாணவர்களிடம் புத்தகங்கள் கிடைக்க இரண்டு வாரங்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளன.
பள்ளிகளே புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்
சென்னை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளே தங்களது மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ஆஞ்சலோ இருதயசாமி கூறினார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது:
பிளஸ் 1 மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாட்டு பாடநூல் கழக கிடங்கில் விற்பனைக்குத் தயாராக உள்ளன. எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகப் பட்டியலுடன், புத்தகங்களுக்கான பணத்தை டி.டி.யாகக் கொண்டு வந்து புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் தாமதம் ஏதுமின்றி சென்னை மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.news by dinamani

Wednesday 26 June 2013

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாநில ஆதார வள மையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளரச் செய்யும் வகையிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மட்டுமல்லாமல் அக்குழந்தைகளின் பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ் நாட்டில் உள்ளடக்கிய கல்விக் கான மாநில ஆதார வள மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் சென்னை, சாந்தோமில் 46 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான உள்ள டக்கிய கல்விக்கான மாநில ஆதார வள மையம் நிறுவப்பட்டுள்ளது.

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை, போன்றவற்றை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள தக்க ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அகில இந்திய அளவில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளடக்கிய கல்விக்கான மாநில ஆதாரவள மையத்தில், இயன்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பார்வை தூண்டல், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள், குழந்தைகளின் குறைபாடுகளின் தன்மையை அளவிடும் மையம், பெற்றோர்களுக்கான ஆலோசனை மையம், அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையம், சிறப்பு புத்தகங்கள் கொண்ட நூலகம், தேசிய நிறுவனங்களின் தகவல் மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவச் சமுதாயத்திற்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் வழங்கி, அவர்களின் கல்வி கற்றலை ஊக்குவித்திடவும், தரமான கல்வியினை வழங்கிடவும், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுத்தி வருகிறது.

அதன்படி, 91 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுற்றுச் சுவர் என 87 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உட்கட்டமைப்பு வசதிகள்;

நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பொம்ம ஹள்ளி, ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் மற்றும் காசிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் மற்றும் செவ்வூர், திருப்பூர் மாவட்டம் அருள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வள்ளுவப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மற்றும் தேவரப்பன்பட்டி ஆகிய 11 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்;

நாகப்பட்டினத்தில் 17 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரியில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம்;

ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; பொது மக்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு மாநகரங்களில் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடங்கள்;

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனத்துடன் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் ஜி. அரியூர், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் நல்லூர், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஆகிய 6 இடங்களில் 17 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள்;

என மொத்தம், 117 கோடியே 77 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 91 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் 11 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 6 மாதிரிப் பள்ளிகள், 2 தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 2 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 2 மாவட்ட நூலகங்கள் ஆகிய வற்றிற்கான புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று திறந்து வைத்தார்.ASiriyar kural
மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்.

1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர், இயக்குனர் போன்ற பல உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடமான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியுடன் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நேரடியாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் பணிக்காலம் முழுவதும் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இல்லவே இல்லை.

2. தற்பொழுது சுமார் 125 – 150 மாணவர்கள் இருந்தாலே உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில் அந்த ஒரு பள்ளியை மட்டும் நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி நிலையவிட, சுமார் 75 - 100 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கண்காணிப்பு, ஆய்வு மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் நிர்வாகப்பொருப்பை வகிக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பதவி நிலை கீழே வைக்கப்பட்டுள்ளது.
3. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 – 8 வகுப்புகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் வட்டார வள மையங்களின் மேற்பார்வையாளர் பதவிக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள நிலையில், மேற்பார்வையாளர் பதவிக்கு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வாய்ப்பளிக்கப் படாதது ஏன் ?.

4. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியானது தொடக்கக் கல்வித் துறைக்கு தொடர்பில்லாத உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது. இப்பணி விதிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாக இருந்தபொழுது வகுக்கப்பட்டது போல தோன்றுகிறது. தற்பொழுது தொடக்கக் கல்விக்கென தனி இயக்ககம் உள்ள நிலையில், தொடக்கக் கல்வித்துறையிலும் பள்ளிக்கல்விதுறைப்போன்று தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பலர் உள்ளனர். இந்த நிலையில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியினை தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கே ஒதுக்கீடு செய்து, மேற்பத்தி 2 – ன்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பத்தி 3 – ன்படி தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பதவியுயர்வுப் பெற்ற வட்டார வளமைய மேற்பார்வையாளர்களைக் கொண்டும் ஏன் நிரப்பக்கூடாது?.

5. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேருபவர்கள் B.Lit., & B.Ed. உயர்கல்வி தகுதி பெற்றதும் பணிமூப்பின் படி தமிழாசிரியர்களாகவும் பின்னர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். இவர்களது மொத்தப்பணிக் காலத்தில் B.Lit., B.Ed. & M.A., உயர்கல்வி தகுதிகளுக்கு இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (4 ஊதிய உயர்வுகள்) பெற்றுவிடுகின்றனர். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து தமிழாசிரியர் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Ed. தேர்ச்சிப் பெற்றால் ஊக்க ஊதியம் மறுக்கப்படுகிறது. இவர்களைவிட உயர் பதவியிலுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Lit., B.Ed. & M.A., தேர்ச்சிக்கு 2 ஊக்க ஊதிய உயர்வுகளையும் பெற்றுவிடுகின்ற நிலையில் – கீழ் பதவி நிலையிலுள்ள நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதற்கு M.Ed. தகுதி பெற வேண்டியுள்ளது. இது எந்த வகையில் நியாயம் ?. இவை அனைத்திற்கும் காரணமாக, தொடக்கக் கல்வித் துறையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிர்வாகப் பொருப்பில் உள்ள உயரதிகாரிகள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் பாரபட்சமான நடவடிக்கை எனவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?....news----facebook...Asiriyar kural

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை

தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலைஜூன் 26,2013,14:55 IST

எழுத்தின் அளவு :


மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.
இந்த கல்விமுறையால், மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு அளவேயில்லை. வெறுமனே அரசு தேர்வுகளுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள் உள்பட, அனைத்து தரப்பாருக்குமே, படிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் உண்டு.
எனவே, இங்கே படிப்பது என்பதுதான் முக்கிய அம்சம். அது பள்ளியா, கல்லூரியா, தொலைநிலைக் கல்வியா அல்லது போட்டித் தேர்வுக்கு படிப்பதா என்பது விஷயமல்ல. தேர்வுக்கு படிக்கும் டென்ஷனிலிருந்து விடுபடுவதற்கு பல மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இக்கட்டுரை, சிறப்பான முறையில் எப்படியெல்லாம் படிக்கலாம் என்று அலசுகிறது.
பொருத்தமான நேரம்
படிப்பதற்கென்று, இதுதான் பொருத்தமான நேரம் என்பதெல்லாம் இல்லை. நமக்கு எந்த நேரம் வசதியாகவும், உற்சாகமாகவும் படுகிறதோ, அந்த நேரத்தையே, படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, இரவு 10.30 மணிக்குமேல் உலகம் அமைதியாக இருக்கும். சிலருக்கு அந்த நேரம் மிகவும் பிடிக்கும்.
சிலருக்கு அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு எழுந்து படிப்பது பிடிக்கும். சிலருக்கு, நண்பகல் வேளையில் படிப்பது பிடிக்கும். எனவே, இது அவரவர் உடல்நிலையையும், விருப்பத்தையும் பொறுத்தது. இதுதான் சிறந்த நேரம் என்றெல்லாம் எதுவும் இல்லை.
ஆரம்பத்திலிருந்தே படிக்கத் தொடங்குதல்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தினந்தோறும் தங்களின் பாடங்கள் வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பெரியளவில் பிரச்சினையில்லை. ஆனால், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள், தேர்வு நெருங்கும் நேரம்வரை அலட்சியமாக விட்டுவிடுவார்கள். தங்களின் புத்தகங்களையே தொட மாட்டார்கள். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன எனும் நிலை வரும்போதுதான், அவர்களின் பலர் படிக்கவே தொடங்குகின்றனர்.
இதனால், பலர், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தொலைநிலைத் தேர்வை வெறுமனே நிறைவுசெய்ய வேண்டும் என்று எழுதுகிறவர்களைவிட, அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் படிப்பிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் இறுதி நேரத்தில் திருப்புதலை மேற்கொண்டு, சிறப்பாக எழுதி, அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். ஆரம்பம் முதலே கடினமாக படித்தால் மட்டுமே, அவற்றில் வெற்றிபெற முடியும்.
திட்டம் வகுத்தல்
என்னதான் கடினமாக உழைத்தாலும், திட்டமிட்டு உழைப்பவனே வெற்றியடைவான் என்பது பிரபலமான அறிவுரை மொழி. அதற்கேற்ப, என்னதான் அதிகநேரம் படித்தாலும், திட்டமிட்டு, தெளிவான புரிதலுடன் படித்தால்தான் பயன் கிடைக்கும். இந்த நாளுக்குள் இந்தப் பாடத்தை முடித்துவிட வேண்டும் மற்றும் இதை இத்தனைமுறை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், எதற்கு எதைப் படித்தோம் என்று குழம்பி, தேர்வை எழுதுகையில், பலவற்றை மறந்து, சொதப்பி விடுவோம். எனவே, திட்டமிட்டு சிறப்பாக படித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமானவற்றை குறிப்பிடல்
படிக்கும்போது முக்கியமான பாயின்டுகள் என்று தோன்றுபவைகளை பென்சிலின் மூலம் அடிக்கோடிட்டுக் கொண்டால், அவற்றை திரும்ப படிக்கும்போது எளிமையாக இருக்கும். மேலும், ஆங்கிலம் போன்ற வேற்றுமொழிகளில் பாடங்களைப் படிக்கையில், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும். எனவே, அதற்கான அர்த்தங்களை, அந்தந்த பக்கங்களிலேயே எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், நன்றாக புரிந்து படிக்க முடியும்.
போதுமான இடைவெளி
படிக்கையில், தொடர்ந்து பல மணிநேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கையில், சோர்வு ஏற்படுவதை தவிர்ப்பது கடினம். எனவே, தேவைப்படும் நேரத்தில், சிறிய சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உட்கார்ந்தே படித்தால், சிறிதுநேரம் நடந்துகொண்டு படிக்கலாம். சிறிதுநேரம் கீழே அமர்ந்துகொண்டோ, எழுத்து மேசை பயன்படுத்தியோ அல்லது மேசை பயன்படுத்தியோ, இவ்வாறு மாறி மாறி செயல்பட்டு, நமது சோர்வை விரட்டலாம்.
வழக்கமாக படுக்கும் கட்டிலின் மீது, இரவில் அமர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பலருக்கு, இரவில் அதன்மீது அமர்ந்து படிக்கையில், விரைவில் தூக்க உணர்வு ஏற்படும்.
எவ்வளவு மதிப்பெண்?
தேர்வுக்கு படிக்கும்போதே, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்தால்போதும், 60 எடுத்தால்போதும் அல்லது 80 எடுத்தால்போதும் என்று நினைத்துப் படிப்பது பெரும் தவறு.
முடிந்தவரை, அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும். முழு மதிப்பெண்களுக்கு குறிவைத்து எழுத வேண்டும். அதேசமயம், Objective type தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் உள்ள தேர்வுகளை எழுதுகையில் கவனமாக செயல்பட வேண்டும். மற்றபடி, இதர விரிவான எழுத்துத் தேர்வுகளில், முழு மதிப்பெண்களுக்கும் எழுத வேண்டும்.
அடுத்தவரை பின்பற்ற முயல வேண்டாம்
உங்களின் நண்பர் படிக்கும் முறை உங்களுக்கு ஒத்துவரலாம் அல்லது ஒத்துவராமல் போகலாம். உங்களின் நண்பர் அதிக மதிப்பெண்களைப் பெறுபவராகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக அவரையேப் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களுக்கு ஒத்துவராத முறையினால், உங்கள் படித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே, எந்தமுறையில் படித்தால் உங்களுக்கு விரைவில் சோர்வு ஏற்படாதோ, எளிதில் கிரகிக்க முடியுமோ, அதிகளவு படிக்க முடியுமோ, அந்த முறையையே பின்பற்றி, வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்.--dinamalar

பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்

தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் இன்று மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் தமிழக முதல்வர்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்புகளுக்காகும் செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகள்; 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள், என மொத்தம் 13 மாணவ மாணவிகள்; என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கியதோடு, “உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று மனதார வாழ்த்தினார்.
முதல்வரிடம் இருந்து பாராட்டோடு, மடிக்கணினிகளையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
br‹id Kj‹ik¡ fšé mYtyç‹ brašKiwfŸ, br‹id-15
e.f.v©.2980/M2/2013,  ehŸ. 26.06.2013

bghUŸ:

gŸë¡ fšé¤Jiw – 2013-2014« fšé M©oš khzt/ khzéfS¡F Ïytr ngUªJ gaz m£il éiuªJ tH§Ftj‰Fça elto¡if nk‰bfhŸs mid¤J tif gŸë¤ jiyik MÁça®fS¡F m¿Îiu tH§Fjš rh®ò.

gh®it:
1.
br‹id-6, jäœehL gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.035405/v«/Ï2/2013, ehŸ.22.06.2013.

2.
Ï›tYtyf  brašKiwfŸ e.f.v©.2980/M2/2013,ehŸ. 24.06.2013
-----
gh®it 2-š  fhQ« Ï›tYtyf brašKiwfë‹ bjhl®¢Áahf br‹id kht£l mid¤J MŒÎ  mYty®fŸ j§fŸ fšé kht£l¤ij rh®ªj gŸë¤ jiyik MÁça®fë‹ T£l¤Âid cldoahf el¤Â  Ïytr ngUªJ gaz m£il¡fhd é©z¥g§fis 27.06.2013 ¡FŸ khefu ngh¡Ftu¤J¡ fHf¤Â‰F  rk®¥Ã¤J cldoahf Ïytr ngUªJ gaz m£ilæid bgw jiyik MÁça®fS¡F  m¿Îiu tH§FkhW bjçé¡f¥gL»wJ.   
Ï¥bghUŸ rh®ªj étu m¿¡ifæid Ïiz¥Ãš F¿¥Ãl¥g£LŸs got¤Âš  ó®¤Â brŒJ 27.06.2013 khiy 5.00 kâ¡FŸ Kj‹ik¡ fšé mYtyf¤Â‰F  ä‹ mŠrš _y« mD¥Ãit¡f  mid¤J MŒÎ mYty®fS¡F«  m¿é¡fyh»wJ.
 Ï¥bghUŸ rh®ghd m¿¡ifæid gŸë¡ fšé Ïa¡FeU¡F clD¡Fl‹ mD¥Ãit¡f nt©oÍŸsjhš Ïš v›éj fhyjhkjä‹¿ mD¥Ã it¡f  m¿é¥gJl‹ fhyjhkj« V‰go‹ ËéisÎfS¡F rh®ªj MŒÎ  mYty®fns KG¥bghW¥ng‰f neçL« v‹W m¿é¡fyh»wJ.

Ïiz¥ò:got«.
               Kj‹ik¡ fšé mYty®
      br‹id.
bgWe®:1)mid¤J  kht£l¡ fšé  mYty®fŸ, br‹id kht£l«.
              2) M§»nyh/bk£ç¡/kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, br‹id kht£l«.


மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்

மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
 
மதுரையில் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நெரிசலை தவிர்ப்பதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மதுரையில் உள்ள 61 பள்ளிகளின் துவக்க நேரத்தை காலை 8:30 மணிக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260613g.jpg 

Tuesday 25 June 2013

மருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் விநியோகம்

சென்னை மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு 2013-14ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று காலை 10 மணி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூலை 05 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Secretary. Selection Committee, Kilpauk, Chennai -10  என்னும் பெயரில் பெறப்பட்ட ரூ.350க்கான காசோலையை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அரசு அலுவலர்களால் சான்றொப்பமிடப்பட்ட தங்களது ஜாதி சான்றிதழ்களின் இரு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்,
+2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், அல்லது கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பி.எஸ்சி.,(நர்சிங்), பி.பார்ம். பிபிடி, பி.ஏ.எஸ்.எல்.பி, பி.எஸ்சி(ரேடியாலஜி அன்ட் இமேஜிங் டெக்னாலஜி), பி.எஸ்சி., (ரேடியேஷன் டெக்னாலஜி), பிஒடி(ஆகுபேஷனல் தெரபி) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் கலந்தாய்வு: 3 நாட்களில் 6940 பேர் ஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் ஜூன் 23ம் தேதி நிலவரப்படி, 6490 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 8657 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 6940 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இவற்றில் 1690 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அதே சமயம் கலந்தாவில் பங்கேற்றும் எந்த கல்லூரியும் தேர்வு செய்யாதவர்கள் 27 பேர் ஆகும்.
கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு www.annauniv.edu/tnea2013/press.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Monday 24 June 2013

BUS PASS

br‹id Kj‹ik¡ fšé mYtyç‹ brašKiwfŸ, br‹id-15
e.f.v©.2980/M2/2013,  ehŸ. 24.06.2013

bghUŸ:

gŸë¡ fšé¤Jiw – 2013-2014« fšé M©oš khzt/ khzéfS¡F Ïytr ngUªJ gaz m£il éiuªJ tH§Ftj‰Fça elto¡if nk‰bfhŸs mid¤J tif gŸë¤ jiyik MÁça®fS¡F m¿Îiu tH§Fjš rh®ò.

gh®it:

br‹id-6, jäœehL gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.035405/v«/Ï2/2013, ehŸ.22.06.2013.
-----
gh®itæš fhQ«    gŸë¡ fšé Ïa¡Feç‹ brašKiw¡»z§f, 2013-2014 M« fšé M©o‰fhd Ïytr ngUªJ gaz m£ilfŸ mid¤J muR k‰W« muR cjé bgW« gŸëfëš gæY« khzt®fS¡F 2013-2014 M« fšéah©oš  Ïytr ngUªJ gaz m£ilfis 26.06.2012  khiy 5.00 kâ¡FŸ  Correction list k‰W«  òÂa khzt®fS¡F, òÂa got« k‰W« ngh£nlh Ïiz¤J  (mid¤J tF¥òfS¡F«) ngh¡Ftu¤J¡ fHf nfh£l mYtyU¡F cldoahf vªj fhuz¤ij¡bfh©L Ïš Rz¡f« fh£lhkš mid¤J muR/muR cjébgW« gŸë¤  jiyik MÁça®fŸ cldo elto¡if vL¡f nt©L« v‹W« bjçé¡f¥gL»wJ.
Ï¥bghUŸ rh®ªj étu m¿¡ifæid Ïiz¥Ãš F¿¥Ãl¥g£LŸs got¤Âš  ÂdK« khiy 3.00 kâ¡FŸ mªjªj  kht£l¡ fšé mYtyf¤Â‰F ä‹ mŠrš _y« mD¥Ãit¡fΫ mid¤J tif gŸë¤ jiyik MÁça®fS¡F« m¿é¡fyh»wJ.
 Ï¥bghUŸ rh®ghd m¿¡ifæid gŸë¡ fšé Ïa¡FeU¡F clD¡Fl‹ mD¥Ãit¡f nt©oÍŸsjhš Ïš v›éj fhyjhkjä‹¿ m¿¡ifæid ä‹ mŠrš _y« 4.00 kâ¡FŸ mD¥Ã it¡f kht£l¡ fšé mYtyU¡F  m¿é¥gJl‹ fhyjhkj« V‰go‹ ËéisÎfS¡F rh®ªj MŒÎ  mYty®fns KG¥bghW¥ng‰f neçL« v‹W m¿é¡fyh»wJ.

Ïiz¥ò:got«.
               Kj‹ik¡ fšé mYty®
      br‹id.
bgWe®:1)mid¤J  kht£l¡ fšé  mYty®fŸ, br‹id kht£l«.
              2) M§»nyh/bk£ç¡/kht£l¤ bjhl¡f¡ fšé mYty®, br‹id kht£l«.

efš:     mid¤Jtif gŸë¤ jiyikahÁça®fŸ, br‹id kht£l«.