Wednesday 16 October 2013

TIME MANAGEMENT- TRY TO FOLLOW THIS

நேர நிர்வாக இரகசியங்கள்
இன்றைக்குப் பெரும்பாலானவர்கள், 24 மணி நேரம் போதாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒன்றை முடிக்கவில்லையா என்று கேட்டால், ‘நேரமில்லை’ என்று எளிதாகக் கூறிவிடு வோர் அதிகம். ஆனால் நம்மை விட அதிக வேலைகளை, அதிகத் திறனோடு செய்பவர்கள் இருக்கிறார்கள், முக்கிய நபர்கள் பலர் ஒரேநேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்கிறார்கள். உணர்ச்சிவசப்படாமல் ஒரு நிமிடம் யோசித்தால் இது உண்மை என்பதை உணர முடியும்.

நேரத்தைத் திறமையாகக் கையாளு பவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.

இன்றைய வெற்றியாளர்கள் பலரும் நேரத்தைத் திறமையாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

நேர நிர்வாகம் என்பது நேரந்தவறாமல் இருப்பது மட்டுமல்ல. பல்வேறு வேலைகளைக் கையாளுவது, எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துவது.

சரியான நேர நிர்வாகம் என்பது எதற்கு. முதலில் முக்கியத்துவம் அளிப்பது என்று அறிந்திருப்பது.

பட்டியல் போடலாம்

பிரபல காலணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜீவ் மேத்தா கூறுகிறார்:

“உங்களின் இலக்கை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த நான்காண்டுகளுக்கான இலக்குகளை யும் முடிவு செய்துவிடுங்கள். வருடாந்திர இலக்குகளின் அடிப்படையில் உங்களின் அன்றாடப் பணிகளையும், வாரப் பணிகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.”

வெறுமனே சொல்வதோடு நின்றுவிடா மல் தனது வருடாந்திர இலக்கை எட்டுவதில் தினசரி கவனம் செலுத்துகிறார் மேத்தா. இரவில் எந்த நேரத்துக்குப் படுக்கப் போனாலும் அதிகாலையில் தவறாது 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். கண் விழித்ததுமே சுறுசுறு சிந்தனையில் ஈடுபடுகிறார்.

அன்றைக்கு முடிக்கவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். அதன்பிறகுதான் செய்தித்தாளைப் புரட்டு கிறார். இவரைப் போன்ற முறையையே பின்பற்றுகிறார், தனியார் வங்கியொன்றின் துணைத் தலைவர்:-

“அலுவலகப் பணி தொடர்பாக அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும், சொந்த விஷயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும் தயாரித்துக் கொள்கிறேன். தினசரி பட்டியலை அன்றன்று நிறைவேற்றுவதால் எனக்குப் பணியில் திருப்தியையும், மாதாந்திரப் பட்டியலை நிறைவேற்றுவதால் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் என்னால் அடைய முடிகிறது” என்கிறார் இவர்.

கஷ்டமானதை முதலில் முடிக்கலாம்

எளிதானதை அல்லது தமக்கு மிகவும் விருப்பமானதை முதலில் முடிக்க நினைப்பது பலரின் பழக்கம். அது சரியல்ல என்கிறார்கள் சாதனையாளர்கள். முன்னணி துணி நிறுவனம் ஒன்றின் இயக்குநரான ராம், தான் செய்ய வேண்டிய பணிகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்வதாகக் கூறுகிறார். அவை,

‘முக்கியமானவை - அவசரமானவை’,

‘முக்கியமானவை - அவசரமற்றவை’,

‘அவசரமானவை – முக்கியமற்றவை’,

‘முக்கியமற்றவை - அவசரமற்றவை’,

‘முதல் மூன்றை முடித்ததும் தான் நான் நான்காவதில் கவனம் செலுத்துகிறேன். எளிதான வேலையை முதலில் முடிக்க நினைப்பதில்லை’ என்கிறார் ராம்.

உங்களுக்கு நீங்களே விருந்தளியுங்கள்

அவசரமான, முக்கியமான வேலைகளை முடித்துவிட்டால் அன்றைய தினத்தின் முடி வில் உங்களுக்கு நீங்களே ‘விருந்தளித்து’க் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ‘விருந்து நேரத்தின்’ மகிழ்ச்சியானது மேலும் அதைப் போல பல விருந்துகளை ‘ உங்களுக்கு நீங்களே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள்.

சில வேலைகள் போரடிப்பதாகவும், திரும்பத் திரும்பச் செய்வதால் அலுப்பூட்டுவதாகவும் இருக் கக் கூடும். அவற்றைத் தவிர்க்கவே நினை ப்பீர்கள். ஆனால் அதற்கு மாறாக நீங் களே உங்களை ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.

பல அசாதாரண விஷயங்கள் வெறும் புத்திசாலித்தனம் அல்லது படைப்புத் திறனால் மட்டும் சாதிக்கப்பட்டவை அல்ல; மாறாக நல்ல வேலைப் பழக்கத்தினால் நிறைவேற்றப்பட்டவை என்பதை ஞாபகத் தில் கொள்ளுங்கள்.

படிக்கும்  மாணவர்கள் இதை  அவசியம்  கடைபிடித்தால்  வெற்றி  நிச்சயம் .
முயற்சி  செய்து பாருங்கள். பெரியவர்களும்   கடைபிடித்தால்  வாழ்க்கையில்  வெற்றிபெறலாம்.