Friday 30 August 2013

sept.05 , வலைபூ நண்பர்கள் கூட்டம் மற்றும் புகைப்படம் பேசுது ஒளிபரப்பு

எனக்கு துணையாக
யாராவது வருவார்கள்
என்ற ஏக்கத்துடனேயே
இதுவரை தனிமையுடன்
வலைபூவில் இணைந்திருந்தேன்

நண்பர்களே உங்களுடன்
உரையாடிய பின்புதான்
வலை பூவில் நம் நட்பின் வரைவிலக்கணம்
அறிந்து கொண்டேன்

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
ஆனால் நம் வலைபூ இணைப்பு நம்மை விட்டு
என்றும் பிரியாது
ஆகவே நாம் அனைவரும் இணைவோம்
வாருங்கள் விழாவிற்கு வரவேற்கிறேன் உங்கள் அனைவரையும்

இனிய வணக்கம்

                             கல்விசார் முகநூல் மற்றும் வலைபூ நண்பர்களே மீண்டும் வணக்கம் . நம் ஆசிரியர்களுக்கு நாம் நடத்தும் குடும்ப விழா .

                           05.09.2013 அன்று மாலை Dr.இராதாகிருஷ்ணன்  விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.   அன்று காலை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் .

                           நம் வலைபூ நண்பர்கள் "புகைப்படம் பேசுது" என்ற தலைப்பில்   அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடியாக  04.09.2013 பிற்பகல் முதல் ஒளிபரப்பலாம் .

                         நண்பர்களே தாங்கள் வரும்பொழுது CAMEARA , TABLET, LAPTOP , DATACARD , USB CONNECTION ...இவையெல்லாம் எடுத்து வந்தால் நம் வலைபூக்களில் நம் குடும்ப விழாவை நேரடியாக ஒளிபரப்பலாம்.

                        முதன்முதலாக இணைய கல்விசார் நண்பர்கள் 05.09.2013 அன்று கூடுகிறோம் . வாருங்கள் சென்னைக்கு , காலையில் வந்தவுடன் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்  என் அலைபேசியை தொடர்பு கொள்ளவும் .


                         சென்னை எழும்பூர் அருகில் சேத்துப்பட்டு M.C.C.Hr.Sec.School இல்
சந்திபோம்.

phone : 9750982287 , 9789422608
E-mail: aeeoganesan@gmail.com

                                                                                                            இவண்,
                                                                                                 இரா.கணேசன்,
                                                                                                  AEEO எழும்பூர்.


                                                                       

No comments:

Post a Comment