Saturday 3 August 2013

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி? சென்னையில் வழிகாட்டி கருத்தரங்கம்

சென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்? என்ற ஒருநாள் வழிகாட்டி கருத்தரங்கை வேப்பேரி பெரியார் திடலில் 7–ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடத்த உள்ளது.
இந்த கருத்தரங்கில், இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அனுபவமிக்க பேராசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள். தேர்வுக்கு தயார் செய்தல், விருப்பப் பாடங்களை தேர்வு செய்தல் உள்பட ஐ.ஏ.எஸ். தேர்வின் அனைத்து நிலைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment