Thursday 1 August 2013

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு நேற்று தொடங்கியது.
காலாண்டு தேர்வுக்கு முன் முதல் பருவ தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு முன் இரண்டாம் பருவ தேர்வு, முழுஆண்டு தேர்வுக்கு முன் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகின்றது.
இந்த பருவத் தேர்வுகள் மாணவர்களிடையே உள்ள பயத்தை போக்கவும், படித்ததை தெளிவாக மனதில் பதிய வைக்கவும் ஒரு பயிற்சியாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தி முடித்த பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதன்படி நேற்று முதல் பருவ தேர்வு மாநிலம் முழுவதும் தொடங்கியது.

No comments:

Post a Comment