Saturday 3 August 2013

தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஜெயலலிதா உத்தரவு

சென்னை,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுகா, திருநகர் சி.எஸ்.ராமாச்சாரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த செல்வன் பி.தேவ் ஆனந்த், ஆர்.விஷ்ணுதரன், என்.சதீஷ்குமார், எஸ்.பரமேஸ்வரன் ஆகிய 4 மாணவர்கள் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் அகால மரணமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment