Thursday 26 December 2013

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான மாநில அளவிலான புத்தக வாசிப்பு முகாம்-டிசம்பர், 28,29




தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் முகாமாக நடத்தபடுகிறது. இதுவரை 8 முறை புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது முறையாக சேலத்தில் நடைபெறுகிறது. எனவே தங்களுக்கு தொடர்புடைய ஆசிரியர்களை இப்புத்தக வாசிப்பு முகாமில் பங்கு பெறச் செய்யும்படி கேட்டு கொள்கிறோம். இரண்டு நாள் முகாமில் ஒவ்வொரு அமர்விலும் கல்வியின் அரசியல், சமகாலக் கல்விக்கூட பிரச்சினைகள், வகுப்பறை ஜனநாயகம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் கலந்துரையாடுகின்றனர்.

பங்கேற்கும் கல்வியாளர்கள்: பேராசிரியர் ச.மாடசாமி, பேரா.கே.ராஜீ, ஆயிஷா நடராஜன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேரா.விஜயகுமார், பேரா.என்.மணி


புத்தகம்:திருமிகு இரா நடராஜன் அவர்களின்  “இது யாருடைய வகுப்பறை

பதிவுக்கு:
1. திருமிகு நீலா, புத்தக வாசிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் – 97866 26273
2. திருமிகு பாலசரவணன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் – 94861 61283

நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
2013 டிசம்பர் 28ந் தேதி காலை 9.00 மணி முதல் 29ந் தேதி மாலை 05.00 மணி வரை.

நிகழ்ச்சி நடைபெறும்  இடம்:
சமுதாய கூடம், சேலம் உருக்காலை, கணபதி பாளையம். கேட் எண்.1
Admin Hall. Salem Steel Plant, Ganapathypalayam.

போக்குவரத்து:
1. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்சன் இரண்டு இடங்களிலிருந்தும் தாரமங்கலம் செல்லும் அனைத்து டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்ஸும் செல்லும்.
2. பஸ் நிறுத்தம் – சேலம் ஸ்டீல் பிளான்ட், முதல் கேட்.

தொடர்புக்கு:
1. திருமிகு ராமமூர்த்தி – 94864 86755,
2. திருமிகு பாலசரவணன் - 94861 61283, 89031 61283
3. திருமிகு K.P. சுரேஷ்குமார் – 94433 91777
4. திருமிகு மீனாட்சி சுந்திரம் – 75986 70004.

No comments:

Post a Comment