Sunday 6 October 2013

உலக சதுரங்க வாகையர் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சென்னையில் நவம்பர் மாதத்தில் உலக சதுரங்க வாகையர் போட்டி-2013 நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர், மாணவியர்களுக்கிடையே சதுரங்க விளையாட்டுப் போட்டியினை நடத்தி வருகிறது.
அதன்படி அக்.,5 (இன்று) சென்னைக்குட்பட்ட நான்கு கல்வி மாவட்டங்களில் கிழக்கு சென்னை, மத்திய சென்னை, வடக்கு சென்னை மற்றும் தெற்கு சென்னையில் அமைந்துள்ள பள்ளிகளில் 11 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

No comments:

Post a Comment