Monday 7 October 2013

சதுரங்கப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு


கிருஷ்ணகிரி, அக். 6-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார் பில் மாவட்ட அளவி லான சதுரங்கப் போட்டி நடந்தது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் துவக்கி வைத்தார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிப் பேசினார். அப்போது அவர் பேசிய தாவது: -தமிழக முதல்வரின் ஆணைப்படி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிநடந்தது. இப் போட்டியில் 48 மாணவர் கள் பங்கேற்றனர். சதுரங்க போட்டிகள் பெரிய நகரங் களில் மட்டுமே நடந்தப் பட்டு வந்தன. தற்போது மாவட்ட அளவில் நடத்தப் படு வதால் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலும், மாநில அளவிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது.இந்த போட்டியில் பங் கேற்ற மாணவர்கள் சிலர் மலைப்பிரதேசமான தளி வட்டாரங்களை சேர்ந்தவர் கள். சதுரங்கப் போட்டி ஒரு அறிவு சார்ந்த போட்டி யாகும். மேலும் இது போன்ற போட்டிக ளில் பங் கேற்கும் போது நன்கு பயிற்சி பெற்று போட்டிகளில் பங் கேற்க வேண்டும். மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள் வதன் மூலம் எளிதில் வெற்றி பெறலாம். எனவே மாணவ, மாணவியர்கள் நன்கு விளையாடி மண்டல அள விலும் மற்றும் மாநில அள விலும் நடைபெறும் போட்டி களில் பங்கேற்று வெற்றி பெற எனது வாழ்த்துக் களை தெரிவித்து கொள் கிறேன்.இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அன்பு, பள்ளித் துணை ஆய்வாளர் சென்னப்பன், மாவட்ட தடகள விளையாட்டுக் கழக செயலாளர் பத்மாவதி, துணை செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராணி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment