Thursday 19 September 2013

இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்: ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம்

முப்பருவமுறையின் கீழ் இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற தனியார் விண்ணப்பிக்கலாம் என, மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
முப்பருவ முறையின் கீழ் 9-ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்துக்கான பாடத்திட்டம் www.dse.tn.gov.in மற்றும் www.tnschools.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் பாடம் நீங்கலாக இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப்புத்தகங்களின் 2 நகல்களை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். .
அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர்-செயலர், மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை -6.

No comments:

Post a Comment