Tuesday 11 June 2013

அரசு பள்ளி மாணவர்களுக்கு மகுடம் சூட்டிய ஆசிரியர்கள்

ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, மகுடம் அணிவித்து, "இளவரசர், இளவரசி" பட்டம் சூட்டி, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.
கோவை மாவட்டம், எஸ்.புங்கம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, கடந்தாண்டு, 74 குழந்தைகள் படித்தனர். 20 பேர், 6ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று, வேறு பள்ளிக்கு சென்று விட்டனர்.

கடந்த சில நாட்களாக,பெற்றோரை சந்தித்து ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும்படி வலியுறுத்தினர். மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி அளிக்க உள்ளதாக உறுதி அளித்து, பிரசாரம் செய்தனர்.

நேற்று பள்ளி திறந்ததும், ஒன்பது குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு மகுடம் அணிவித்து, இளவரசர், இளவரசி பட்டம் சூட்டி, ஆசிரியர்கள் மகிழ்வித்தனர். இதனால், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்; குழந்தைகளும், மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.

No comments:

Post a Comment