Saturday 11 May 2013

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, அனைத்துப் பிரிவினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 198.50. இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 0.50 அளவுக்கு அதிகரிக்கும் என்பதால், அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆக இருக்கும்.இதேபோன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்பட அனைத்துப் பிரிவினரின் கட்-ஆஃப் இந்த ஆண்டு 0.50 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.

2012-13 கட்-ஆஃப் விவரம்: 
ஓ.சி.-198.50; 
பி.சி.-197.50; 
பிசிஎம்-196.25; 
எம்.பி.சி.-196.00; 
எஸ்.சி.-192.25; 
எஸ்.சி.ஏ.-192.00; 
எஸ்.டி.-185.00.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டு படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த ஆண்டும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment